மகாலய பக்ஷம் தர்ப்பணம் மற்றும் தானங்களில் தெளிவான விளக்கம்

மஹாளய பக்ஷம் எனும் மகத்தான புண்ணிய தினங்கள் 20.09.2021 பௌர்னமி பிலவ புரட்டாசி 4 ம் முதல் 06.10.2021 பிலவ புரட்டாசி 20 ம் நாள் புதன் கிழமை அமாவாசை வரை

மஹாளயபக்ஷம் அமாவாசை புதன் கிழமை 06.10.2021 பிலவ புரட்டாசி 20 ம் நாள் வருகிறது

நம்மீது வைத்துள்ள ஈடிணையற்ற கருணையினால், பித்ருக்கள் எனப் பூஜிக்கப்படும் நம் முன்னோர்கள் எங்கோ கற்பனைகளுக்கும் மீறிய பலப் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ருக்களின் உலகத்தில் இருந்து, ஸ்வர்ணமயமான விமானங்களில், சூர்ய கதிர்களின் வழியாக பூவுலகிற்கு எழுந்தருளி, மஹாளய பட்சம் எனும் அந்த பதினைந்து புனித தினங்களிலும் நம்முடன் தங்கியிருக்கிறார்கள் என்று வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.

கிடைத்தற்கரிய புண்ணிய பலனை நமக்கு அளித்தருளும் அந்தப் பதினைந்து நாட்களும் – நாம் தூய்மையான உள்ளத்துடன் இருக்க வேண்டும். வீட்டை தூய்மைப்படுத்தி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பதினைந்து நாட்களிலும், வீட்டில் எவருடனும் சண்டையிடுவதோ, அல்லது தவறான வார்த்தைகள் பேசுவதோ அல்லது அசைவ உணவு உண்பதோ கண்டிப்பாகக் கூடாது. ஏனெனில், அப்போது நம் முன்னோர்கள் நம் வீடுகளில் தங்கியிருக்கிறார்கள்.

அவர்களது தேஜஸ்ஸை (தெய்வீக ஒளி) நம் ஊனக்கண்களில் பார்த்தால், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நம் பார்வை போய் விடும். ஆதலால்தான் அப்பெரியோர்கள் தங்கள் ஒளியை மறைத்துக் கொள்கிறார்கள்.

சக்தி உள்ளவர்கள் தினமும் சிராத்தம் செய்யலாம். இதற்கு வசதியில்லாத அன்பர்கள் அவரவர்கள் தங்கள் தந்தை இறைவனடி சேர்ந்த திதியன்று செய்யலாம். தந்தை காலமான தினத்தின் திதி தெரியாதவர்கள் ஏகாதசி அல்லது மஹாபரணி ஆகிய தினங்களில் செய்யலாம். புண்ணிய நதிக்கரையில் செய்வது மிகச் சிறந்த நற்பலனை அளிக்கும்.

பக்ஷம் என்றால் 16 நாட்கள்; மஹாளயம் என்பது பித்ரு தேவதைகள் வசிக்கும் இடம். பித்ருக்கள் பூமிக்கு வந்து நம்முடன் சூக்ஷ்ம ரூபத்தில் வசிக்கும் 16 நாட்களே மஹாளய பக்ஷம். புரட்டாசி மாச அமாவாசைக்கு முந்தைய 14 நாட்களை மாஹாளய பக்ஷம் என்று பெயர். புரட்டாசி அமாவாசையை மஹாளய அமாவாசை என்று சொல்கிறோம்.

இந்த நாட்களில் நமது மூதாதையர்களான பித்ருக்கள் பூலோகத்திற்கு சூக்ஷம ரூபத்தில் வந்து நாம் அளிக்கும் பித்ருதர்பணங்களை நேரடியாக எற்பகிறார்கள். பொதுவாக பித்ருக்கள் எல்லா நாட்களிலும் பூலோகம் வர இயலாதாம். ஒவ்வொரு அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் அவர்கள் மறைந்த திதி நாட்கள் மற்றும் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே அவர்களால் பூலோகத்திற்கு வர இயலுமாம். அதனால்தான் அவர்கள் வரும் தினங்களில் பித்ரு பூஜையை செய்யச் சொல்லியிருக்கிறார்கள் மஹரிஷிகள்.

புரட்டாசி அமாவாசையன்று சகல லோகங்களிலும் இருக்கும் மஹரிஷிகள், தேவர்கள்மற்ஸ எல்லா ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து பித்ரு தர்பணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. நமது பித்ருக்களான வசு, ருத்ர, ஆதித்யர்கள் கூட பூலோகம் வந்து பித்ரு தர்பணங்களை சூக்ஷ்ம ரூபமாய் செய்கிறார்கள் என்பர்.

அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் க்ரஹண காலங்களில் செய்யும் தர்பணமானது நமது தந்தை மற்றும் முந்தைய 2 தலைமுறையினருக்கும், தாய் வழியில் 3 தலைமுறையினருக்குமாக 12 பேர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது.ஆனால் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே, காருணீகர்கள் எனப்படும் மாமா-மாமி, பெரியப்பா-பெரியம்மா, அத்தைகள்,சகோதரர்கள்-அவர்களது மனைவிகள், சித்தப்பா-சித்தி, மாமனார்-மாமியார், குரு, நண்பர்கள் ஆகிய எல்லோருக்கும் செய்ய முடிகிறது.பித்ருக்களுக்கு உணவாவது எள் கலந்த நீரே. இதனை மந்த்ர பூர்வமாக அவரவர் பெயர் சொல்லி அளிப்பதன் மூலம் அவர்களது ப்ரீதிக்குப் பாத்திரமாகிறோம்.

இறந்தவர்கள் எங்கோ மறுபடி பிறந்திருப்பார்களே பின் எதற்கு இவை என்று ஒரு கேள்வி வரும்.அவ்வாறு பிறந்தாலும், மீண்டும் பிறந்த அந்த ஜீவனுக்கு அந்த நேரத்தில் வேண்டிய பொருளாக நாம் அளிக்கும் எள்ளும்-நீரும் மாறிவிடும் என்கிறார்கள். இன்னொரு கருத்துப்படி, நமது முன்னோர்கள் மற்றொரு பிறவி எடுத்தாலும்,நாம் செய்யும் சிராத்தம்/தர்பணம்போன்றவை ஸ்ரீவிஷ்ணுவுக்குப் ப்ரீதியாகிவிடுவதாகவும், செய்யத் தகுதியுடையவன் செய்யாது விடக்கூடாது என்பது பெரியவர்கள் கூற்று.
மஹாளயத்தை மூன்று விதங்களில் செய்யலாம். பார்ணவம் எனப்படும் ஹோமத்துடனான சிராத்தமாகவும், ஹோமமில்லாது ஹிரண்ய சிராத்தமாகவோ, அல்லது தர்பண ரூபமாகவோ செய்வது வழக்கம். நமது பொருளாதார, இட-கால வசதிக்கு ஏற்ப ஏதேனும்ஒரு வழியைப் பின்பற்றியோ அல்லது குலவழக்கத்தின்படியோ செய்வது அவசியம். 15 தினங்களும் தர்பணம் செய்வதற்கு பக்ஷ-மாளயம் என்று பெயர்.

இதனைச் செய்ய இயலாதவர்கள் விசேஷ தினங்களான மஹாபரணி, மத்யாஷ்டமி, வ்யதிபாதம், கஜச்சாயா,அல்லது தமது தாய்/தந்தையின் திதிகளில் மட்டுமாவது ஹிரண்ய ரூபமாக சிராத்தம் செய்து அன்னமிடுதல் வேண்டும். குடும்பத்தில் யாரேனும் சன்யாசியாகி மரணமடைந்திருந்தால் அவர்களுக்கு மாஹாளய ஏகாதசியன்று சிராத்தம் செய்வதும் துர்மரணமடைந்தவர்களுக்கு சதுர்தசி உத்தமமானதாகச் சொல்லப்படுகிறது.

பொதுவாக நாம் தர்பணங்கள் செய்யும் போது நமது வலதுகை ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் நடுவிலாக நீரை வார்க்கிறோம். இந்த இருவிரல்களுக்கு நடுவில் இருக்கும் ரேகைகளை பித்ரு-பூம்ய ரேகைகள் என்பர். இந்த ரேகைகள் மூலமாக அளிக்கப்படும் நீரானது பித்ருக்களுக்கானதாக மாறிவிடுகிறதாம்.
இந்த 15 நாட்களும் சிராத்தம், தர்பணம் போன்றவை மூலமாக தான தர்மங்களைச் செய்தல் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானதாச் சொல்லப்படுகிறது. இவ்வாறு ப்ரீதியான பித்ருக்கள் நமது வம்சம் தழைக்கவும், நோய்-நொடியற்ற வாழ்வுக்கும் ஆசிர்வாதிக்கின்றனர். நமது வாழ்வுக்கு நல்லது என்பது ஒருபுறமிருந்தாலும், நம்மை வளர்த்து ஆளாக்கிய நமது பெரியவர்களுக்கு நாம் செய்யும் நன்றி அறிவித்தல் என்ற எண்ணத்திலாவது இந்த பித்ரு பூஜையை விடாது செய்ய வேண்டும். அவரவர் குலாசாரத்தின்படியாக எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படியாக செய்து மூதாதயர்களை வணங்கி, அவர்களது அருளை நாடுவோம்.

மஹாளய பக்ஷம் எனும் மகத்தான புண்ணிய தினங்கள் 20.09.2021 பௌர்னமி பிலவ புரட்டாசி 4 ம் முதல் 06.10.2021 பிலவ புரட்டாசி 20 ம் நாள் புதன் கிழமை அமாவாசை வரை முடிவடைகிறது.

மஹாளயத்தில் வரும் திதி, நட்சத்திரம், யோகம் அடிப்படையில் தர்பணம், தான தர்மம் வழிகளில் முன்னோர்களை வழிபட மிகவும் உன்னதமான நாட்கள் கீழே தரப்பட்டுள்ளது

மஹாளயபக்ஷம் தர்ப்பண பலன்கள்!

20.09.2021 திங்கள் பௌர்னமி: செல்வம் பெருகும் (தனலாபம்)

21.09.2021 செவ்வாய் பிரதமை: செல்வம் பெருகும் (தனலாபம்)

22.09.2021 புதன் துவிதியை: வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)

23.09.2021 வியாழன் திருதியை: திருப்திகரமான இல்வாழ்க்கை (வரன்) அமையும்

24.09.2021 வெள்ளி மகா பரணி: பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)
பிலவ நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்தியாம் புண்யதிதௌ, ப்ருகு வாஸர அபபரணீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் சதுர்த்தியாம் புண்யகாலே, பித்ருவ்ய, மாதூலாதி வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம் ஸகருஸ்ய காருண்ய பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்தியர்த்தம், ஸக்ரூன் மஹாளய ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

24.09. 2021 வெள்ளி – சதுர்த்தி : பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)

25.09.2021 சனி பஞ்சமி: விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)

26.09.2021 ஞாயிறு: சஷ்டி தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)

27.09.2021 திங்கள் சப்தமி: மேலுலகோர் ஆசி
28.09.2020 புதன் அஷ்டமி: நல்லறிவு வளரும்
பிலவ நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர ஆர்த்ரா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம் புண்யகாலே, பித்ருவ்ய, மாதூலாதி வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம் ஸகருஸ்ய காருண்ய பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்தியர்த்தம், ஸக்ரூன் மஹாளய ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

29.09.2021 புதன் நவமி: ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை

30.09.2021 வியாழன் தசமி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை

01.10.2020 வெள்ளி: தசமி தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்

02.10.2021 சனி: ஏகாதசி வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்

03.10.2021 ஞாயிறு : துவாதசி மற்றும் மகம் நட்சத்திரம் தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்

04.10.2021 திங்கள் திரியோதசி : நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்

05.10.2021 செவ்வாய் சதுர்த்தசி: முழுமையான இல்லறம் (கணவன் – மனைவி ஒற்றுமை)

06.10.2021 புதன் மஹாளயபக்ஷம் அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்

06.10.2021 – புதன் – மஹாளய அமாவாஸ்யை
பிலவ நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர,உத்திரம்/ ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

மஹாளய அமாவாசை அன்று பஞ்சாங்கம்
பிலவ வருஷம், தக்ஷ்ணாயனம், வர்ஷ ருது, பாத்ரபத(அல்லது கன்யா) மாஸம், புரட்டாசி 20 ம் நாள் புதன் கிழமை அக்டோபர் 6 ம் நாள் வருகிறது. காலை சர்வ அமாவாஸ்ய திதி மாலை 5.36 வரை பிறகு அடுத்தநாள் பிரதமை, பகல் 3:49 வரை. இன்று உத்திரம்நட்சத்திரம் பின்னர் அடுத்தநாள் அஸ்தம் நட்சத்திரம், சுப்ர யோகம் சது கரணம்.புதன் கிழமை. 06.10.2021 – புதன் – மஹாளய அமாவாஸ்யை தர்பனம்: பிலவ நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர, உத்திரம்/ ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

மஹாளய பக்ஷ தர்ப்பணம்

பித்ரு பக்ஷ பூஜையின் முக்கியத்துவம்

கருட புராணத்தின் படி, ஒரு நபரின் இறப்பின் முதல் வருடத்தில் சிரார்த்தம் சடங்குகளைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் புறப்பட்ட பிறகு அவர் ஒரு வருடத்திற்குப் பிறகு சாப்பிட வேண்டிய உணவைப் பெறுகிறார். அடிப்படையில், ஒரு நபர் 13 நாட்கள் வெளியேறும்போது, அவரது குடும்ப உறுப்பினர்களால் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவருக்கு உணவு வழங்கப்படுகிறது. 13 நாட்களுக்குப் பிறகு ஆன்மா தனது பயணத்தைத் தொடங்கி பதினோரு (11) மாதங்களில் யாம்லோக்கை அடையும் மற்றும் கடந்த ஒரு மாதத்தில் (12 ஆம் தேதி) அவர் யாம் கோட்டை அடைகிறார். அப்போதுதான் அவருக்கு சாப்பிட உணவு கிடைக்கும். இதனால்தான் சிரார்த்தம் செய்வது மிகவும் முக்கியமானது.

மஹாளய அமாவாசை என்றும் அழைக்கப்படும் அமாவாசை பிரிந்த ஆன்மாக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த உடலை விட்டு வெளியேறும்போது, நீங்கள் தேவர்கள் அல்லது தேவதைகளின் தொகுப்பால் வேறொரு உலகத்திற்கு வழிநடத்தப்படுவீர்கள். புரூரவா, விஸ்வேதேவா – இவை அவர்களின் பெயர்கள். அவர்கள் வந்து உங்களை ஒரு மட்டத்திலிருந்து இன்னொரு நிலைக்கு வழிநடத்துகிறார்கள். மஹாளய அமாவாசை என்பது நீங்கள் பிரிந்த அனைத்து ஆன்மாக்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து அமைதியை விரும்பும் நாள்.

ஒரு பண்டைய பாரம்பரியம் உள்ளது, அதில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு சில எள் மற்றும் சிறிது அரிசியை எடுத்துக்கொள்கிறார்கள், பின்னர் அவர்கள் தங்கள் மூதாதையர்களை நினைத்து, ‘நீங்கள் திருப்தி அடையலாம், நீங்கள் திருப்தியடையலாம், நீங்கள் திருப்தியடையலாம்’ என்று கூறுகிறார்கள். இதை மூன்று முறை சொல்லவும், பின்னர் அவர்கள் சிறிது எள் விதைகளை சிறிது தண்ணீரில் விடவும்.

இந்த சடங்கின் முக்கியத்துவம், பிரிந்தவர்களிடம் சொல்வது – உங்கள் மனதில் இன்னும் சில ஆசைகள் இருந்தால், அவை எள் விதைகள் போல என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவை குறிப்பிடத்தக்கவை அல்ல, அவற்றை கைவிடுங்கள். நாங்கள் உங்களுக்காக அவற்றை கவனித்துக்கொள்வோம். நீங்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும், திருப்தியுடனும் இருப்பீர்கள்! உங்களுக்கு முன்னால் ஒரு பெரிய பிரபஞ்சம் உள்ளது. பிரபஞ்சம் எல்லையற்றது, எனவே எதிர்நோக்கிச் செல்லுங்கள்; உங்களை பின்னுக்கு இழுக்கும் எதையும் கைவிடுங்கள். இது சிரார்த்தம் தர்ப்பணம் என்று அழைக்கப்படுகிறது.
தர்ப்பணம் என்றால் போனவர்களுக்கு திருப்தியையும் நிறைவையும் தருவதாகும். அவர்களை திருப்திப்படுத்தி மேலும் நகர்த்தச் செல்ல சிரார்த்தம் இது செய்யப்படுகிறது.

மூதாதையரின் இறப்பு நேரம், தேதி மற்றும் இயல்பைப் பொருட்படுத்தாமல் ஒருவர் தனது மூதாதையருக்கு கடமையை நிறைவேற்றும் நாள் இது. இது ஒரு வகை பார்வண சிரார்த்தம். இந்த நாளில் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யப்படுகிறது.

இறந்த நாள் மறந்துபோன அல்லது அறியப்படாத அனைத்து முன்னோர்களுக்கும் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கும் அபரா கர்மா செய்ய இந்த நாள் பொருத்தமானது. அமாவாசை, சதுர்த்தசி மற்றும் பூர்ணிமா அன்று இறந்தவர்களுடன். பித்ரு பக்ஷத்தின் மற்ற எல்லா நாட்களிலும் ஒருவரால் சடங்குகளைச் செய்ய முடியவில்லை என்றால், இந்த நாளிலும் அதைச் செய்யலாம். இந்த நாளில் பித்ருக்கள் பிது லோகத்திற்குத் திரும்புவார்கள் என்று நம்பப்படுகிறது, எனவே அவர்கள் விசேஷமாக வழிபடப்பட்டு, வணங்கப்பட்டு, தங்கள் வழியில் அனுப்பப்படுகிறார்கள்.

வைதீக நடைமுறைகளைத் தவிர, குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தின் புதைகுழியைப் பார்வையிடுவது, சுத்தம் செய்வது, பித்ரு பக்ஷ பூஜை செய்வது மற்றும் அந்த நாளில் இறந்தவரை சமாதானப்படுத்த பல்வேறு உணவுப் பொருட்களை வழங்குவது நல்லது

பித்ரு தர்ப்பணம் என்பது பித்ருக்களுக்கு தண்ணீர் மற்றும் கருப்பு எள் விதைகளை வழங்குவதாகும். தர்ப்பணம் இல்லாமல், ஸிரார்த்தம் முழுமையடையாது. அனைத்து அமாவாசை (அமாவாசை) மற்றும் கிரகணங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம் என்றாலும், மகாளய பக்ஷ தர்ப்பணம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இது தெற்கு திசை நோக்கிய கற்றறிந்த அறிஞர்களின் வழிகாட்டுதலின் கீழ் வழங்கப்படுகிறது. இது ஸிரார்த்தம் வழங்கும் கர்த்தாவுக்கு நீண்ட ஆயுள், பிரகாசம், உயர்ந்த புத்தி (பிரம்மவர்ச்சஸ்வா), செல்வம், வெற்றி மற்றும் நல்ல பச்சனை (உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கும் திறன்) வழங்குகிறது. மகாளய தர்ப்பண மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் தர்ப்பணம் வழங்கப்படுகிறது.

மஹாளய அமாவாஸ்யை தர்பனம் மந்திரம்:

பிலவ நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர, உத்திரம்/ ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

சுவதா நமஸ் தர்பயாமி, சுவதா நமஸ் தர்பயாமி, சுவதா நமஸ் தர்பயாமி

செயல்முறைகள்

ஸ்ரார்த்தம் நான்கு படிகளில் செய்யப்படுகிறது:

1. விஸ்வதேவ ஸ்தபனா – இது ஒரு தொழில்முறை பூசாரியைக் கலந்தாலோசிப்பது மற்றும் சடங்கைச் செய்வதற்குத் தேவையான மற்ற அனைத்து பொருட்களையும் சேகரிக்கும் செயல்முறையைக் குறிப்பிடுகிறது.

2. பிண்டம் – அரிசி, பார்லி, பசும்பால், தேன், நெய் மற்றும் சர்க்கரையால் ஆன ஆத்மாக்களுக்கு ஒரு வட்ட வடிவ பந்தில் உணவு வழங்கப்படுகிறது.

3. தர்ப்பன் – எள், பார்லி, தர்பை புல் மற்றும் வெள்ளை மாவு ஆகியவற்றுடன் தர்பனம் தண்ணீரை வழங்கி வருகிறது.

4. பிராமணர்களுக்கு உணவளித்தல் – இறுதியாக, பிராமணர்களுக்கு நன்றி உணவாக உணவு வழங்கப்படுகிறது.

நேரங்கள்

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு சம நாட்கள் பக்ஷம் உள்ளது, ஒன்று சுக்ல பக்ஷம் மற்றொன்று கிருஷ்ண பக்ஷம். இந்தியாவில், வட இந்தியர்கள் அஷ்வின் மாதங்களில் கிருஷ்ண பக்ஷத்திலும், தென்னிந்தியர்கள் பத்ரபாத மாத கிருஷ்ண பக்ஷத்திலும் இதைச் செய்கிறார்கள். கிருஷ்ண பக்ஷத்தின் கடைசி நாள் சர்வபித்ரி அமாவாஸ்யா அல்லது மஹாளய அமாவாஸ்யா என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது துர்கா பூஜையின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

முக்கியமாக உணவு (பிண்டம்) பிரசாதம் மூலம் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்தும் இறுதிச் செயலைச் செய்யும் நல்ல செயல். ஒரு தனிநபர் வாழ்க்கையில் செய்ய வேண்டிய மிக முக்கியமான மதச் செயலாகக் கருதப்படுகிறது- ஒரு பிஸியான அட்டவணையில் இருந்து ஆண்டுதோறும் சில நாட்களை அர்ப்பணித்து அதன் முன்னோர்களை கௌரவித்து அதன் மூலம் கடந்த தலைமுறையினரின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.

இந்த வருடம் ” சிரார்த்தம் ” செய்வதற்கான காலம் 20 செப்டம்பர் 2021 முதல் அக்டோபர் 06 2021 வரை பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டுள்ளது. சிரார்த்தம் கொண்டாட்டம் சர்வபித்ரு அமாவாசை நாளில் முடிவடையும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இறுதி நாள் பிரசாதங்களுக்கு மிகவும் உகந்ததாகத் தெரிகிறது.

புரோஹித் முன்னிலையில் நிகழ்த்தப்படும் சிரார்த்தம் விழா சிறந்தது.

சிரார்த்தம் பூஜை சமாக்ரி

பித்ரு பக்ஷம் இது நம் முன்னோர்களுக்கு மரியாதை மற்றும் மரியாதை செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பு சிரார்த்தம் பூஜை ஆகும். இந்த பூஜையை அஷ்வின் மாதத்தின் முதல் நாள் தொடங்கி அமாவாசை அல்லது அமாவாசை நாள் வரை (வட இந்திய நாட்காட்டியின்படி) ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் செய்யலாம், அதேசமயம் தென்னிந்திய நாட்காட்டியின் படி பத்ரபாத மாதத்தின் அமாவாசை நாளில் முடிகிறது.

நம்பிக்கைகள்: முனிவர்கள் அல்லது பிராமணர்களுக்கு உணவு, பழங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்குவதற்காக இறந்த உறவினர்களால் இந்த பூஜை செய்யப்படுகிறது மற்றும் இறந்தவரின் ஆன்மா சாந்தியடையும்.

பிரசாதம்: நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையச் செய்வதற்காக சிரார்த்தம் பூஜை செய்யப்படுகிறது.
சிரார்த்தத் தில் என்ன தானம் செய்ய வேண்டும்
சிரார்த்தம் பூஜையில் சுப பொருட்களை தானம் செய்வது பித்ரு தோஷத்திலிருந்து விடுபட உதவுகிறது. புராண நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களின்படி ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உள்ளது.

வெல்லம் – இது வறுமையை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் செல்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கிறது.

நிலம் – ஒரு முனிவருக்கு நிலத்தை வழங்குவது உங்களுக்கு நிதி ரீதியாக வளர உதவுகிறது.

தங்கம் – இது வீட்டில் உள்ள ஒற்றுமையை குறைக்கிறது மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே அமைதியான உறவை ஏற்படுத்த உதவுகிறது.

மாடு – மற்றவர்களுக்குப் பரிசாகப் பசுவை கொடுப்பது, பெயர், புகழ் மற்றும் அனைத்து வார்த்தைகளான இன்பங்களையும் கொடுத்து உங்களுக்கு உதவுகிறது, ஏனெனில் இது யாராலும் செய்யப்படக்கூடிய தூய்மையான தானம்.

உணவு தானியங்கள் – இது செழிப்பை அளிக்கிறது.
நெய் – முனிவருக்கு நெய்யை வழங்குவது வாழ்க்கையின் அனைத்து கண்ணோட்டங்களிலும் வளர உதவுகிறது.

உப்பு – உப்பு நம் முன்னோர்களின் ஆத்மாவை சமாதானப்படுத்துகிறது, இதனால் அவர்கள் நமக்கு வரங்களை அளிக்கிறார்கள்.

ஆடைகள் – எப்போதும் செழிப்பு மற்றும் மன அமைதியுடன் ஆசீர்வதிக்கும் முனிவர்களுக்கு ஒரு ஜோடி ஆடைகள் பரிசாக வழங்கப்படுகின்றன.
வெள்ளி – வெள்ளியை வழங்குவது நம் முன்னோர்களின் ஆன்மாவை அமைதிப்படுத்தி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
எள் விதைகள் – எள் விதைகளை வழங்குவது எந்தவிதமான ஆபத்துகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

சிரார்த்தம் செய்ய வேண்டியவை & செய்யகூடாதவை
பசும்பால், பசுவின் தயிர் மற்றும் பசும்பால் நெய் உபயோகிக்கவும்.

சிரார்த்தம் சடங்குகளுக்கு அண்மையில் ஒரு தாய் மாடு விரும்பப்படக் கூடாது

சடங்குகளில் கடுகு, பார்லி, பட்டாணி மற்றும் கங்காணி, கடலை பயன்படுத்தவும்.

சிரார்த்தம் சடங்குகளுக்கு தங்கம், செம்பு, வெள்ளி மற்றும் வெண்கல பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள். பிரிந்த ஆன்மாக்களை தொந்தரவு செய்வதால் இரும்பை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

சிரார்த்தம் செய்வதன் முக்கியத்துவம்

ஒரு நபர் எந்த வழியில் இறந்தாலும் அவர் உங்களில் யாராவது இந்தியாவில் இறந்தால் அது நிஜம் அல்ல ஆனால் உங்களுக்கு நெருக்கமான ஒருவர் இறப்பதை நீங்கள் பார்த்திருந்தால், நீங்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டும், யாராவது தனியாக உடலை விட்டு வெளியேற மாட்டார்கள். . நீங்கள் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு மேல் உடலை வைத்திருந்தால், ஒருவர் ஷேவ் செய்தால் மட்டுமே முடி வளரும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள், ஏனென்றால் முக முடி கவனிக்க முடியும், நகங்கள் வளரும்.

மகள்களால் சிரார்த்தம் செய்ய முடியுமா?

ஆம், அவர்களால் நிச்சயமாக முடியும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மகனுக்கும்/மகளுக்கும் தனது பெற்றோருக்கு சிரார்த்தம் பூஜை செய்ய சம உரிமை உண்டு.

சிரார்த்தம் என்பது இறந்த ஆன்மாவுக்கு மறுபிறப்பு மற்றும் இந்த பிரபஞ்சத்திலிருந்து எப்போதும் இலவச ஓட்டம் ஆகியவற்றுக்கு தர்ப்பணம் வழங்குவதாகும், மேலும் இது அவர்களின் சொந்த குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாராலும் செய்யப்பட்டால், இறந்தவருக்கு எப்படி தர்ப்பணம் கிடைக்கும்? எனவே, “பித்ரு தர்ப்பணம்” பெறுவதற்கு சொந்த குடும்ப உறுப்பினர்களால் ஷ்ரத் பூஜை செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது, எனவே அவர்கள் ஒரு பெண்ணாகவோ அல்லது பையனாகவோ அதற்கு சமமாக தகுதியுடையவர்கள். பித்ரு தர்ப்பணம் ஒரு பெண்ணால் செய்யப்பட்டால், கருப்பு எள் விதைகளுக்கு பதிலாக வெள்ளை எள் விதைகளை ஷ்ரத் பூஜையில் பயன்படுத்த வேண்டும்.

ஷ்ரத் பூஜைக்கான இடங்கள்

வாரணாசி, உத்தர பிரதேசம்
பிரயாகா (அலகாபாத்), உத்தரப் பிரதேசம்
கயா, பீகார்
கேதார்நாத், உத்தரகண்ட்
பத்ரிநாத், உத்தரகண்ட்
ராமேஸ்வரம், தமிழ்நாடு
கோகர்ன், கர்நாடகாவில் உள்ள நகரம்
நாசிக், மகாராஷ்டிரா
கபால் மோச்சன் சரோவர், யமுனா நகர், ஹரியானா

புரட்டாசி மாத அமாவாசையே மஹாளயபட்ச அமாவாசையாகும். அதாவது சூரிய- சந்திர கிரகங்களின் சங்கமத்தில் தோன்றுகின்ற சோமாதித்ய (சோம + ஆதித்ய) யதி மண்டலத்தின் தோற்றமாகும்.
மஹாளயத்தை.

1.பார்வணம்.

2.ஹிரண்யம்.

3.தர்ப்பணம்

மஹாளயபக்ஷம் தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.

1) பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை ( பித்ருக்களாக ) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, ப்ராம்ஹணர்களுக்கு சாப்பாடு போடுவது ,

2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது,

3) தர்ப்பணம் என்பது தானாகவே அமாவஸைபோல் தர்ப்பணமாகச் செய்வது.

இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் கட்டாயம் தனது பித்ருக்களுக்குச்செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள்

1.தேவகடன்,

2.பித்ருகடன்,

3.ரிஷிகடன்

ஒவ்வொரு மனிதனும், தேவகடன் நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனிலிருந்தும் நிவர்த்தி அடையலாம்.
பித்ருகடன்,தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றைத் தக்க காலங்களில் செய்வதன் மூலம் பித்ருகடனிலிருந்தும்நிவர்த்தி அடையலாம்.
ரிஷிகடன் முனிவர்கள் அருளிய உயர்ந்த படைப்புகளை பாராயணம் செய்து உபாசிப்பதன் மூலமும், குருமார்களையும் ரிஷிகளையும் ஆராதித்தல், வீடு தேடி வரும் சன்யாசிகளுக்கு உணவளித்தல், அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தல் போன்றவற்றின் மூலமும், ரிஷிகடனிலிருந்தும் நிவர்த்தி அடையலாம்.

பித்ரு லோகத்தில் வசிப்பவர்கள், மாதப்பிறப்பு, அமாவாசை, மஹாளயபக்ஷம் அவரவர் மறைந்த திதி ஆகிய நாட்களில் மட்டுமே பூலோகப் பிரவேசம் செய்ய இயலும். அதில், மஹாளயபக்ஷம் ‘பித்ருக்களின் பிரம்மோற்சவம்’ என்று சிறப்பிக்கப்படுகிறது. ஏனேனின், இந்த 15 நாட்கள் அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ்வாறு வாசம் செய்ய பூலோகம் வரும் போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

இந்த பதினைந்து நாட்களும், பித்ரு லோகத்தில் வாசம் செய்யும் முன்னோர்கள், பூமிக்கு வருகை தருகிறார்கள். வாழ்வு முடிந்த பின், 9 நாட்கள், பிரேத சரீரத்துடன் இருக்கும் ஆத்மா, 10ம் நாள் செய்யப்படும் விசேஷ கர்மாக்களைத் தொடர்ந்து, 12ம் நாள் பிரேத சரீரம் நீங்கப்பெற்று, சூட்சும சரீரத்துடன் பித்ரு லோகத்தை அடைகிறது. அங்கிருந்து யமப்பட்டணமாகிய ‘ஸம்யமனீபுரி’யை ஒரு வருட முடிவில் அடைகிறது. அங்கு, அந்த ஆத்மாவின் கர்மாக்களுக்கு ஏற்ப சொர்க்கவாசமோ, நரக வாசமோ கிடைக்கிறது. அதன் பின், மீண்டும் அடுத்த பிறவி எடுக்கவோ, அல்லது தகுந்த காலம் வரும் வரை பித்ரு லோகத்தில் வாசம் செய்யவோ நேரும்.

நம் முன்னோர்களில், யார் முக்தி அடைந்திருக்கிறார், யார் மறு பிறவி எடுத்திருக்கிறார், யார் பித்ருலோகத்தில் இன்னமும் வாசம் செய்கிறார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். ஆகவே, கண்டிப்பாக, பித்ருகர்மாக்களை, முக்கியமாக, மஹாளய சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

நமது முன்னோர்கள் யாராவது முக்தி அடைந்திருந்தால், நமது சிரார்த்தத்தின் பலனை அந்த இறைவனே ஏற்று அருள் புரிகிறார். பொதுவாக, நாம் செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றின் புண்ணிய பலன், சேமித்து வைக்கப்பட்டு, தக்க நேரத்தில் நம்மை வந்தடையும். ஆனால், மஹாளய பட்சத்தில், நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்க வருவதால், அந்த நேரத்தில் செய்யும் சிரார்த்த கர்மாக்களின் பலன்கள், உடனடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு, பலனும் உடனடியாக நமக்குக் கிடைத்து, நம் தீராத, நாள்பட்ட ப்ரச்னைகள் உடனடியாகத் தீர்வுக்கு வருவதை நம் கண்முன் காணலாம்.

இந்த மஹாளய பட்சத்தில், ஒருவர், மறைந்த, தம் தாய் தந்தையர், தாத்தா,பாட்டி ஆகியோர்களுக்கு மட்டுமில்லாமல், குழந்தை இன்றி இறந்து போன தம் தாயாதிகளுக்கும் சேர்த்துத் தர்ப்பணம் செய்யலாம். அதன் பலனாக அவர்களின் ஆசிகளையும் பெறலாம்.
மிகுந்த தெய்வ பக்தி உடையவர்கள், வேதம், தமிழ் மறைகள் ஓதியவர்கள், நீதி நேர்மையுடன் வாழ்ந்தவர்கள், பித்ரு சரீரம் அடையும் போது, மிகுந்த நன்மை செய்பவர்களாகிறார்கள். அவர்களுடைய சரீரம் ஒளி பொருந்தியது. அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் சரியாகச் செய்யும் போது, குடும்பத்தில் இருக்கும் தீராத நோய், கடன், பகை, எதிர்பாராத விபத்துக்கள், குழந்தையின்மை போன்ற பல ப்ரச்னைகள் நீங்குகின்றன. மாறாக, இது தவிர்க்கப்பட்டால், தலைமுறைகள் தாண்டியும் ப்ரச்னைகள் தொடரும். இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது.

புதன்கிழமையும், அமாவாசையும் கூடி வரும் போது அரச மரத்ததில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் கூடியிருப்பார்கள், அப்போது அரச மரத்தை சுற்றி வந்தால்நினைத்த காரியம் நிறைவேறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும்,பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வருடம் மஹாளயபட்ச அமாவாசை 06-10-2021 புதன்கிழமை வருகிறது.

சந்திர மாத அடிப்டையில் பாத்ரபத மாஸ – பகுள பட்சம் (தேய்பிறை) காலமும் அதன் முடிவில் வரும் அமாவசை மஹாளய அமாவாசை எனப்படும். இது தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதத்தை ஒட்டியும், சில வருடங்களில் ஆவணி மாத இறுதியிலும் வரும் இந்த வருடம் புரட்டாசி 20 ம் நாள் புதன் கிழமை அக்டோபர் 6 ம் நாள் வருகிறது.
மஹாளயபக்ஷம் என்றால் மஹான்களின் இருப்பிடம் என்று பொருள். நமது முன்னோர்கள் பூமியில் 16 நாட்கள் தங்கி தனது சந்த திகளுக்கு நன்மை செய்ய ஆசிர்வதிக்கும் காலம் இது.

இக்காலத்தில் எமதர்மன் மறைந்த நமது முன்னோர்களை அவர்கிளின் பெற்றோருடன் பூமிக்கு செல்ல அனுமதியளித்து அக்காலத்தில் பூமியில் உள்ள மகன்கள், மகள்கள் அளிக்கும் தர்பணம், தானம் மூலமான உபசாரங்களை எற்க கட்டளையிடுகிறார்.
இக்காலத்தில் உணவளிக்கமாட்டார்களா என மறைந்த மூதாதையர் ஏங்குவார்கள். அவர்களின் ஆத்மாசாந்திக்காக அன்னதானம் செய்வது மிக அவசியமானது மாளயத்தில் அன்னரூபமான சிரார்தம் மிகவும் சிறப்பானது. அதை செய்ய இயலாதவர்கள் அன்னதானம் செய்யலாம்.

தான பலன்!

மஹாளயபக்ஷம் புண்ணிய தினங்களில் ஏழைகளுக்கும், ஆசார அனுஷ்டானங்களில் சிறந்த பெரியோர்களுக்கும் வஸ்திர தானம், அன்னதானம், கன்றுடன் கூடிய பசு தானம், தீப தானம் ஆகியவற்றை அளிப்பது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும்.மாளைய பட்சம் அன்ன தானம் செய்ய மிகவும் உகந்த காலம் ஆகும்

மஹாளயபக்ஷம்பட்சத்தில் தினமும் காலையில் பசுமாட்டிற்கு 2 கிலோ தவிடு, வெல்லம், உறுவிய அகத்திகீரை ஆகியவற்றை கலந்து ஊறவைத்து காலையில் தானம் செய்யவும். பிறகு யானைக்கு தானம் செய்யவும்,இதன் பிறகு ஏழைகளுக்குத் தானம் செய்யவும்,

மஹாளயபக்ஷத்தில் ஏதேனும் ஒருநாளில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யலாம்.

வேதம் கற்பிக்கும் வேதபாட சாலைகளுக்கு மஹாளயபக்ஷத்தில் உதவிசெய்வது மகா புண்ணியமாகும்

மஹாளயபக்ஷம் தர்பணம் செய்துவைக்கும் பிராமணருக்கு தரும் பணம் சம்பளம் (சம்பாவனை) ஆகும் அது தானம் அல்ல!

அவரின் கடமைக்கு தரும் பணத்தை தானம் என்று தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம்.எனவே தானத்தை தனியாக சரியான வழியில் செய்யவேண்டும்.

ஸ்நானம்!

இந்த மஹாளய அமாவாசை தினத்தில் புண்ணிய நதிகள், சேது, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய திருத்தலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வது, காசி, கயை, குருக்ஷேத்திரம், சூர்ய குண்டம், பிரம்ம சரஸ் ஆகிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா போன்ற மகா புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து, பித்ருக்களுக்காக அவரவரது சக்திக்கேற்ப தானம் கொடுப்பது அளவற்ற புண்ணிய பலனைத் தரும்.

சிராத்த பலன்!

மஹாளயபக்ஷத்தில் செய்யும் சிராத்தம், மற்றும் பித்ரு பூஜைகள் ஆகியவற்றின் புண்ணிய பலன் நமக்குப் பல பிறவிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும். தர்ம தேவதைக்கு தீப தானம் அளிப்பது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும். மஹாளயபக்ஷத்தில் சிராத்தம் செய்து, பித்ருக்களை பூஜிக்கும் புண்ணிய பலன் எத்தகைய கொடிய கிரக தோஷங்களானாலும், ஒரு நொடியில் போக்கி விடும்.

பித்ருக்களை வழி அனுப்புதல்!

மஹாளயபக்ஷம் அமாவாசை அன்றுதான் பித்ருக்கள் அவர்களது உலகங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். ஆதலால், அன்று அவர்களை விசேஷமாக பூஜித்து, நமஸ்கரித்து, அவர்களை வழி அனுப்ப வேண்டும். கிடைத்தர்க்கரியது பித்ருக்களின் ஆசி. அதிலும் மஹாளயபக்ஷம் 15 நாட்களும் அவர்கள் நம்முடன் பரம கருணையுடன் தங்கியிருப்பதால், அதற்கேற்ப நாம் பக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

கிடைத்தற்கரியது மஹாளயபக்ஷம் புண்ணிய காலம்.
பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயபக்ஷம்செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
பிதிர் வழிபாட்டில் பிண்டம் போட்டு சமைத்த உணவு, பழங்களை நைவேதிக்கின்றேம். பிதிர்கள் திருப்தியடைய எள்ளுந் தண்ணீரும் இறைக்கின்றோம். புரோகிதருக்கு அரிசி, காய்கறி, வேட்டி சால்வை, தட்சணை கொடுக்கின்றோம். இவ்வழிபாட்டால் எமக்குப் பிதிர் ஆசியும் குரு ஆசியும் கிடைக்கின்றது. மேலும் நாம் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி மோக்ஷ அர்ச்சனை செய்து வழிபடுவதால் தேவ ஆசியும் கிடைக்கின்றது.

நமது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் யாவும் நாம் எமது முற்பிறப்பில் செய்த பாப புண்ணியத்துக்கு அமையவே நடைபெறும். அதிலே பிதிர் காரியமும் ஒன்றாகும். அதனை நாம் கிரமமாக சிரத்தையுடன் செய்ய வேண்டும். அது தவறின் பிதிர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிஷ சாஸ்திரம் கூறுகின்றது.

முதன் முதலில் பிரபஞ்சத்தில் தோன்றிய ஆதிமூலச் சூரிய கிரகமும், ஆதிமூலச் சந்திர கிரகமும் இணைகின்ற கிரகமண்டல சங்கமத்தில் தோன்றுவதே மஹாளயபக்ஷபூஷித லோகமாகும்
இங்குதான் மஹாளயபக்ஷத்தை பெருந் திருவிழாவாக தேவர்களும் பித்ருக்களும் கொண்டாடுகிறார்கள். அதாவது, நமது மூதாதை யர்களது பித்ரு லோகங்களில் கொண்டாடப் படுகின்ற பிரம்மோற்சவமே மஹாளயபக்ஷம் மாகும்.

பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண நீரைக் கொண்டு, பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்களும் பித்ரு கணங்களும் பித்ரு பத்தினிகளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப் பெறுகின்றனர்.
மஹாளயபக்ஷத்தின் பதினான்கு திதிகளிலும், பித்ருக்கள் நடத்துகின்ற பூஜா பலன்களுக்காக பித்ருக்களின் தேவதையான ஸ்ரீமந்நாராயணனே சோமனாகிய சந்திரனையும் ஆதித்யனாகிய சூரியனையும் இயங்க வைத்து, யதி மண்டலத்தைத் தோற்றுவிக்கிறார். இதில்தான் பித்ருக்களுடைய ஜீவசக்தியை இறைவன் யதி மண்டலக் கலசமாய் ஆராதனை செய்து தருகின்றார்.

எவ்வாறு சிருஷ்டியின்போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியைத் தொடங்குகிறாரோ, அதே போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக உற்பவிக்கும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.
புரட்டாசி மாத மஹாளயபக்ஷம்அமாவாசை யன்று, சர்வகோடி லோகங்களிலுமுள்ள மகரிஷி கள் உட்பட அனைத்து ஜீவன்களும் தேவதைகளும் பூலோகத்திற்கு வந்து, புண்ணிய நதிக்கரைகளிலும் சமுத்திரங்களிலும் மற்றும் காசி, ராமேஸ்வரம், கயை, அலகாபாத் திரிவேணி சங்கமம், கும்ப கோணம் சக்கரப்படித்துறை போன்ற புனித தலங் களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர். வசு, ருத்ர, ஆதித்ய, பித்ரு தேவர்களே இந்நாளில் தர்ப்பணம் இடுகின்றனர் என்றால், மஹாளயபக்ஷம் மகிமை சொல்லவும் அரிதன்றோ?

நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத் திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற் றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக் கின்றனர்.

பொதுவாக அனைத்து அமாவாசை திதிகளிலும்
ஸ்ரீ அக்னி பகவானின் பத்தினியான ஸ்வதா தேவியானவள், நாம் இடுகின்ற எள்ளையும் நீரையும் வாங்கி வானத்தில் எங்கெங்கோ உள்ள நீத்தார் உலகங்களுக்கு எடுத்துச் செல்கிறாள். ஆனால், மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய- சந்திர உலகிற்கு வந்துபோவதால் ஸ்வதா தேவியால் அனைத்து உறவினர்களையும் அங்கு சந்திக்க முடிகிறது. எனவே மஹாளய பட்ச அமாவாசையில் நாம் சமர்ப்பிக்கும் எள், நீர் ஆகியவற்றை இறந்த நமது உறவினர்களி டையே உடனடியாக அவள் சேர்த்துவிடுகி றாள்.
இறந்த உறவினர்கள் மீண்டும் எந்தப் பிறவி எடுத்தாலும், அந்தப் பிறவியில் அவர் களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற காரியத்துக்குத் தேவையான உதவியை, காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு “மாற்றுப் பண்டங் களாக’ உருவாக்கித் தந்துவிடுகிறாள் ஸ்வதா தேவி.

பித்ரு தர்ப்பணம் என்பது ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றாகும். நமது மூதாதை யர்களுக்குரிய அமாவாசை, கிரகணகால, மாதப்பிறப்புத் தர்ப்பணங்களை முறையாகச் செய்யாமையால்தான் உலகில் பல துன்பங்கள் உண்டாகின்றன. எனவே இதுகாறும் செய்யா மல் விட்ட தர்ப்பணங்களுக்கு ஓரளவு பிராயச் சித்தமாக மஹாளயபட்சத்தின் பதினைந்து நாட்களிலும் தினந்தோறும் தர்ப்பணம் செய்வது அவசியம். மேலும் அந்நாட்களில் அன்னதானம் செய்வது வெகு விசேஷமானது! அப்படிச் செய்வது, தர்ப்பண பலன்களைப் பன்மடங்காகப் பெற்றுத் தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!
இறந்துபோன மூதாதையர்களின் நினைவாக நாம் அளிக்கும் உணவானது, (இந்த மஹாளயபக்ஷம் காலத்தில்) உடனே அவர்களைச் சென்று அடைவதாய் ஐதீகம்.

நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்த தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டு மின்றி, நமது வம்சாவளியினரான நமக்குத்தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே மஹாளயபக்ஷத் திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்கு கிறது.
மஹாளயபக்ஷம் பதினைந்து நாட்களிலும், தர்ப்பணத்தைச் செய்யும் தத்தம் கணவன்மார் களுக்கு உதவிபுரிவது ஒவ்வொரு இல்லறப் பெண்ணின் தலையாய கடமையாகும். அதாவது தர்ப்பணத்திற்கான பலகை, தாம்பா ளம், எள், தர்ப்பை போன்றவற்றை எடுத்து வைத்து கணவனுக்கு ஆர்வமூட்டி தர்ப்பணம் செய்ய வைத்தல் என்பது அவளது முக்கிய கடமைகளுள் ஒன்றாகக் கருத வேண்டும்.
பொதுவாக வலது ஆள்காட்டி (குரு விரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிர விரல்) இடையிலுள்ள “பித்ரு- பூம்ய’ ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல்நோக்கி எழும் பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள பித்ரு லோகத்தை அடைகின் றது. சாதாரணமாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே இந்த “பித்ரு லோக- அந்தர ஆகர்ஷண’ சக்தியின் தெய்வீகத் தன்மையாகும். மஹாளயபட்ச அமாவாசையன்று இச்சக்தி யானது மிகவும் அபரிமிதமாகப் பெருகுகின்றது.
பித்ருக்களுக்கு தர்ப்பணமிடும்போது பசுந்தயிர் கொண்டு தர்ப்பணமிடுவது வெகு விசேஷமானது. மேலும் அவர்களுக்கு ஆத்ம திருப்தியளிப்பதாய் கருதப்படுவது புடலங் காயாகும். (பித்ரு லோகத்திலுள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே; இதன் நிழலில்தான் பித்ரு- தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.)

பூவுலகிற் பிறந்தோர் விண்ணுலகை அடைவர் என்பது நியதி. இஃது அவரவர் செய்தபாவ புண்ணியங்களால் அமைவதாகும். ஒருவர் உயிர் நீத்தவுடன் இறைவன் திருப்பாதங்களை எய்தலாம் அல்லது ஆன்மாவாக இருந்து பின்னர் இறைவனை அடையலாம். ஆனால் அவை எமக்குத் தெரியாது. இதனாலேயே நமது வாழ்வில் எமக்குப் பிதிர் வழிபாடும் முக்கியமாகின்றது.
ஒருவரது உயிர் அவரைவிட்டுப் பிரிந்து இறையடிசேரலாம் அல்லது அந்த ஆன்மா தனது பக்குவ நிலையை எய்தும்வரை சஞ்சாரஞ் செய்யலாம். அவ்வாறு சஞ்சரிக்கும் வேளையில் பூவுலக நிலைகளை அது நினைவுகூரும். அதற்காகவே பிதிர் திருப்தியடையும் பொருட்டு பிண்டம்போட்டு எமது முன்னையோரை நினைவுகூர்ந்து படையல் படைத்து நீர், இளநீர் முதலானவற்றை அர்ப்பணித்துப் பிதிர்களை நினைவு கூருகின்றோம்.

அவர்களின் ஆசிக்கு வணங்கி நிற்கின்றோம். அது செய்து புரோகிதருக்கு அரிசி காய்கறி, வேட்டி, தக்ஷ்ணை கொடுத்துக் குரு ஆசியையும் பெறுகின்றோம். இவைகளைச் சிரார்த்தம் அல்லது திவசஞ் செய்து குரு ஆசியைப் பெறுதல் எனச் சைவ சமயம் கூறுகின்றது. இவைகளின் மேல் கோவிலில் குல தெய்வத்துக்கு நெய்த்தீபமாகிய மோக்ஷதீபத்தை ஏற்றி அவர் மோக்ஷம் அடைய அர்ச்சனை செய்து வழிபடுகின்றோம்.

சிரார்த்தஞ் செய்யும் போது இஞ்சி, கீரை, கிழங்கு, வாழைக்காய், புடோல், மாங்காய், பாகற்காய் முதலானவை சமையல் செய்து படைக்கவேண்டும்.
சர்க்கரைச் சாதம் அல்லது அரிசிப் பாயாசம் விரும்பினால் சாதவகைகளும் வைக்கலாம்.
வடை, முறுக்கு, அதிரசம் என்பனவும் படையலுக்கு உரியன. வெற்றிலை பாக்கு, பழவகையுடன் செவ்விளனியும் வைத்தல் வேண்டும். செவ்விளனீர் பிதிர்கள் தாகசாந்திக்காக வைக்கப்படுவதாகும்.
பிதிர் வழிபாட்டில் முருங்கைக்காய், உள்ளி, வெங்காயம், பூசணி சேர்க்கப்படுவதில்லை.
புரட்டாசி மஹாளயபக்ஷம் ஒரு விசேஷம் உள்ளது. நாம் மஹாளயஞ்செய்யும் போது இறந்துபோன எமக்கு வேண்டியவர்களையும் நினைவுகூர்ந்து மஹாளயஞ் செய்வதாகும்.

மரணத்துக்கு பிறகு மனிதன் திரும்பவும் பூமிக்கு வருகிறான் என்ற நம்பிக்கை பல காலமாக இருக்கிறது. பிதுர்கள் என்ற பெயரில் அவர்கள் வருவராம். குறிப்பாக, அமாவாசை நாளில் அவர்கள் இப்படி வருவதாகச் சொல்வர். இந்த நாளில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அமாவாசைகளில் மிகவும் உயர்ந்தது மஹாளயபக்ஷம் அமாவாசை. “இந்த நாளில் எப்படி முன்னோரை வணங்க வேண்டும்? அவர்களுக்கு கர்ம காரியங்கள் எப்படி செய்ய வேண்டும்? என பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார் கருடன்.

அதற்கு கிருஷ்ணர் சொன்னார்…

“கருடனே! எந்த இடத்தில் கர்மம் செய்கிறோமோ… அந்த இடத்தை மெல்லிய பொருள் (மயிலிறகு போன்றவை) கொண்டு பெருக்கி, கோமயம் கொண்டு மெழுக வேண்டும். அந்த இடத்தைச் சுத்தம் செய்யாமல் காரியம் செய்தால், அந்த தர்ப்பணத்தின் பலன் அசுரர்களையும், பேய், பிசாசுகளையும் சென்று சேரும்.
“அந்தக் கர்மங்கள் நடக்கும் போதே அதைச் செய்பவர்களிடையே சண்டை சச்சரவு வந்து விடலாம் அல்லது ஏதோ காரணத்தால் தடை ஏற்பட்டு விடலாம். அந்த இடம் சுத்தமாக இருந்தால் தேவர்கள் வந்து காரியம் சிறப்பாக நடந்து முடிய ஆசிர்வதிப்பர்.
“இறந்து போனவன் காரியம் செய்வதைப் பார்க்கவா போகிறான்? அவன் இருக்கும் காலத்தில் என்னவெல்லாம் அட்டூழியம் செய்தான் தெரியுமா? அவனுக்கு இதுபோதும் என்று நினைத்து சுத்தமற்ற இடத்தில் காரியம் செய்தால், அது செய்பவனுக்கும், யாருக்காக செய்யப்படுகிறதோ அவனுக்கும் கேடு விளைவிக்கும். அவர்கள் நரகத்தையே அடைவர்.
“இறந்தவர்களுக்கு எள் தானம் செய்ய வேண்டும். பகவானாகிய என் வியர்வையில் இருந்து எள் உற்பத்தியாகிறது. கருப்பு, வெள்ளை ஆகிய இரு ரகங்கள் இதில் உண்டு. இதில் கருப்பு எள்ளை காரியத்திற்கும், வெள்ளை எள்ளை தானம் கொடுக்கவும் பயன்படுத்தலாம். கருப்பு எள் கொடுத்தால் அதிக பலன் உண்டாகும்.

“தர்ப்பைப் புல்லை முடிச்சு போட்டு மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். இந்தப் புல்லின் ஓரங்களில் பிரம்மாவும், சிவனும் உள்ளனர். நடுவில் நாராயணனான நான் இருக்கிறேன். பிராமணர், மந்திரம், தர்ப்பை, அக்னி, துளசி ஆகியவற்றிற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது, இதை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். ஒருவருக்கு பயன்படுத்தியதை இன்னொருவருக்கு பயன்படுத்தினாலும் தவறில்லை!’ என்றார்.

இந்த முறைப்படி தீர்த்தக் கரைகளுக்குச் சென்று தர்ப்பணம் செய்து வர வேண்டும். தர்ப்பணம் செய்ய நான்கு சிறந்த ஆறுகள் உள்ளதாகவும் கூறியுள்ளார் பகவான் கிருஷ்ணன். அவை கங்கை, யமுனை. காவிரி, தாமிரபரணி.

கடற்கரைகளில் தர்ப்பணம் செய்வது இன்னும் மேலானது. காரணம், கடலில் தான் உலகிலுள்ள அத்தனை நதிகளும் கலக்கின்றன. எனவே, இது மிகப்பெரிய பலனைத் தரும். தர்ப்பணம் செய்வதால் நமக்கு மட்டுமின்றி, இறந்து போன நம் முன்னோர் செய்த பாவங்களும் நீங்குகின்றன என்பதும், வருங்கால வாரிசுகள் சுகமான வாழ்வைப் பெறுவர் என்பதும் நம்பிக்கை.

உங்கள் பிள்ளைகளுக்கு ஆன்மிகம் சொல்லித் தரும்முன் நீங்கள் அதை எவ்வளவு தூரம் உணருகிறீர்கள் என்பதை தயவு செய்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். எல்லாம் தெரிந்ததுபோல கும்பலோடு கும்பலாக சகலரும் செய்கின்ற பூஜை, புனஸ்காரங்களை செய்கிறீர்களா, கோயிலுக்காக செய்வது என்று குழப்பமாக எதிலாவது ஈடுபடுகிறீர்களா என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஆன்மிகம் என்பது எதையும் செய்வது அல்ல; உணர்வது. நீங்கள் எது செய்தாலும் அதை முழுமையாக உணர்ந்து செய்வது. நீங்கள் மஹாளயபக்ஷம் செய்வதாகவே வைத்துக்கொள்ளுங்கள்.

தர்பனம் செய்தால் மகளுக்கும் மகனுக்கும் நல்லது. பேரப் பிள்ளைகளுக்கும் உயர்வு என்று நினைத்துச் செய்கிறீர்களா? அப்படிச் செய்யாது போனால் குற்றம் வந்துவிடுமோ என்று பயந்து அந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்களா?

அல்லது உங்கள் சொந்த நலனுக்காக ‘நமக்கு நாளைக்கு எவனாவது செய்ய வேணாமா?’ என்கிற எண்ணத்தோடு செய்கிறீர்களா? இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ‘நன்றி அறிவித்த’லாக அதை உணர்ந்து செய்ய ஆரம்பியுங்கள்.

என் அருமையான தகப்பன் கடினமாக உழைத்து, சிக்கனமாக வாழ்ந்து, என்னைப் படிக்க வைத்து, நல்ல வேலையில் கொண்டுபோய் சேர்த்து, நான் உயர்வதைப் பார்த்து மகிழ்ந்து, எனக்குத் திருமணம் செய்து வைத்து, பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்துவிட்டு, என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வதித்துவிட்டுப் போனாரே… அதற்காக நன்றி என்று தெரிவிப்பது நல்லதல்லவா?
அந்தத் தாய் இல்லையெனில் நான் இல்லை. தன் உதரத்தில் சுமந்தவள் என்பதால் மட்டுமல்ல, ஒவ்வொரு கணமும் என் நினைவாகவே வாழ்ந்து, எனக்காகவே தன் வாழ்க்கை வசதிகளை சுருக்கிக்கொண்டு, என்னுடைய வளர்ச்சியையும் கம்பீரத்தையும் பார்த்துப் பூரித்து ‘அது என் பிள்ளை’ என்று பலபேர் முன்னால் கர்வமாகச் சொல்லி, அந்தக் கர்வத்தின் காரணமாகவே இன்னும் அதிக உதவிகள் செய்து, உங்கள் மனைவிக்கு வாழ்வின் மேன்மைகளை உணர்த்தி, உங்கள் பேரப் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்கள் சொல்லி, சட்டென்று ஒருநாள் போய் வருகிறேன் என்று சொன்னதுபோல மறைந்து போனாளே… அவளுக்கு மனமார்ந்த நன்றியாக தர்பனம் செய்வதுதான் எத்தனை சுகம்! நெஞ்சார்ந்த நன்றி என்று தாய் தந்தையாரை நினைத்துக் கொண்டுவிட்டால் அந்த நீத்தார் கடனில் எவ்வளவு ஆழமாக, உணர்வுப்பூர்வமாக ஈடுபட முடியும்!
‘அன்பு தாயே, தந்தையே, நீங்கள் வெளிச்சத்திற்கு வாருங்கள் உங்கள் பசி தீர்க்க இந்த அரிசி மாவினால் செய்த பிண்டத்தை சமர்ப்பிக்கிறேன். உங்கள் தாகம் தீர்க்க எள் நீர் வார்க்கிறேன். உங்களை கைகூப்பி இந்த இடத்தில் இந்த இந்த மஹாளயபக்ஷத்தில், என் அருகே வந்து நான் கொடுக்கின்ற இந்த சிறிய பொருட்களை காணிக்கையாக ஏற்று சந்தோஷமடைய வேண்டும். எங்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேண் இங்கே உட்கார்ந்து இத்தனை கம்பீரமாக இதைச் செய்ய முடிகிறதென்றால் அது நீங்கள் என்னை நன்கு வளர்த்ததுதான் காரணம்’ என்று நெகிழ்ந்து சொல்லுங்கள்.

அரிசி மாவினால் செய்த பிண்டத்தை காக்கை தின்று விட்டது. ஐயர் தட்சணையை வாங்கிக்கொண்டு போய்விட்டார். நீரில் இறைத்த ஜலம், நீரோடு கலந்துவிட்டது. நீங்கள் மட்டும் குளக்கரையில் அமர்ந்து நீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மனம் மட்டும் அந்த மஹாளயபக்ஷத்தில், அம்மாவையும், அப்பாவையும், மற்ற முன்னோர்களையும் நினைத்துக் கொள்ளும். உள்ளுக்குள் கை கூப்பும். கண்களின் ஓரம் நீர் திரளும்.

பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண நீரைக் கொண்டு, பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்களும் பித்ரு கணங்களும் பித்ரு பத்தினிகளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப் பெறுகின்றனர்.
நாம் திருக்கோயில் செல்லாமலிருக்கும்போது இறைவனே வீதிவுலா வந்து நமது இல்லங்களின் வாயிலிலேயே நமக்குத் தரிசனம் அளிப்பது போன்று, மஹாளய பட்சமாகிய இந்தப் பதினைந்து நாட்களும் நமது முன்னோர்களே நம் வீடு தேடி வந்து, நம்முடன் தங்கியிருந்து, நாம் அளிக்கும் உபசாரங்கள், பூஜைகள் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்று, நம்மை ஆசீர்வதித்து, மஹாளய அமாவாசை தினத்தன்று அவர்களுக்குரிய உலகங்களை அடைகின்றனர். அவ்வாறு அவர்கள் மனநிறைவு பெற்று நம்மை ஆசீர்வதிப்பதால், முற்பிறவித் தவறுகளால் இப்பிறவியில் நமக்கு ஏற்படும் அல்லது ஏற்படக்கூடிய கடன் தொல்லைகள், நோய்கள், குடும்பப் பிரச்சினைகள், குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் தடங்கல்கள், செய்வினை தோஷங்கள், நியாயமில்லாமல் பிறரால் கொடுமைக்கு ஆளாகுதல், புத்திரப்பேறின்மை, கணவன்_மனைவியரிடையே அன்னியோன்யம் குறைதல், கணவன்_மனைவி பிரிந்திருத்தல், உத்தியோகத்தில் தொல்லைகள், மனநலக்குறைவு, குடும்பத்தில் ஏற்படும் தற்கொலைகள், அகால மரணங்கள், காரணமற்ற மனபயம் ஆகிய மிகக்கொடிய துன்பங்களும்கூட அடியோடு நீங்கிவிடும் என்பது சத்தியம்.

எவ்விதம் பித்ருக்கள் வருகிறார்கள்?

மஹாளயபக்ஷம் ஆரம்ப தினத்தன்று பித்ரு தேவதைகள், சூரிய பகவான், தர்மராஜன் ஆகியோரின் அனுமதி பெற்று பித்ருக்கள், ஸ்வர்ண (தங்கம்) மயமான விமானங்களில் ஏறி நம்மிடம் வருகிறார்கள். இந்த விமானங்கள் சூரியனின் ஒளிக்கற்றைகள் மூலம் பறந்து வருகின்றன. இவ்விதம் பித்ருக்கள் பூமியில் இறங்கும்போது அவர்களை தேவர்களின் உலகிலுள்ள மகரிஷிகள் ஆசீர்வதிக்கின்றனர்.

தேவர்கள் வணங்குகின்றனர். பித்ருக்கள் பரம பவித்திரமானவர்கள். தங்களது ஜீவித காலத்தில் செய்துள்ள புண்ணிய செயல்களால் புடமிட்ட தங்கம்போல் ஒளிபொருந்தியவர்களாகப் பித்ருக்கள் பிரகாசிக்கிறார்கள் எனப் புராதன நூல்கள் போற்றிப் புகழ்கின்றன.

மீண்டும், தங்கள் குழந்தைகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதால், அவர்கள் பேருவகை அடைவதாக ‘கருடபுராணம்’ கூறுகிறது. அவர்கள் நம்மிடையே வந்து நம்முடன் தங்கும் இந்தப் பதினைந்து புனிதநாட்களும் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேசவேண்டும், வீட்டை எப்படிப் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ‘வைத்யநாத தீக்ஷிதம்’ என்ற வடமொழி நூல் அதிஅற்புதமாக நமது நன்மைக்காக விளக்கியுள்ளது.

இந்த, பதினைந்து நாட்களிலும், ஒவ்வொருவரும் நமது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், பாலியலைத் தூண்டும் புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
நாம் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறோமோ _ எந்த அளவிற்குச் சுத்தமாக இருக்கிறோமோ _ எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோமோ _ எந்த அளவிற்குப் பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கிறோமோ அந்த அளவிற்கு இந்தப் பதினைந்து நாட்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அடைகிறார்கள் எனப் பழைமையான தர்மநெறி நூல்கள் கூறுகின்றன.

பித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாட்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மையைக் கண்டு மனத் திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள்.
உடனுக்குடன் நன்மை!

நாம் செய்யும் அனைத்துப் புண்ணிய காரியங்களுக்கும் நமக்கு நல்ல பிரதிபலன் உண்டு. நமது நற்செயல்களுக்கான புண்ணிய பலனை எட்டு தேவர்கள் அவ்வப்போது சேர்த்து வைத்துக்கொண்டே வருகின்றனர். எதிர்காலத்தில் நமக்குத் துன்பங்கள் ஏற்படும்போது இவ்விதம் சேர்த்து வைத்த புண்ணிய பலன்களை நமது தேவைக்கு ஏற்றவாறு நமக்கு அளிக்கின்றனர். ஆனால், மஹாளய பட்சத்தின்போது நாம் பித்ருக்களை அந்தப் பதினைந்து தினங்களிலும் பூஜித்து, அவர்களுக்குத் திருப்தியை அளிக்கும் நற்செயலின் பலன் மட்டும் நமக்கும், நம் குடும்பத்தினருக்கும் முக்கியமாக நமது குழந்தைகளுக்கும் உடனுக்குடன் அளிக்கப்படுகிறது. அதனால் குடும்பத்தில் ஏற்படும் சிரமங்களனைத்தும் உடனுக்குடன் தீர்க்கப்பட்டுவிடுகின்றன. மஹாளயபக்ஷத்தின் தனிச்சிறப்பு இதுதான்.
நமக்கு உதவியவர்களுக்கும் திதி செய்தல்!
நமது பாரத தர்மம் உலகமனைத்தையுமே பாசத்துடன் அணைத்துக்கொண்ட தர்மமாகும். நமக்குப் பல தருணங்களில் அன்பும், இரக்கமும் காட்டி உதவிய பித்ருக்களுக்கும் இந்த மஹாளயபக்ஷத்தில் திதி செய்கிறோம். இவர்களுக்கு ‘காருண்ய பித்ருக்கள்’ என்று பெயர். அதாவது நாம் துன்பப்படும்போது நம்மீது கருணைகாட்டி உதவிய பித்ருக்கள் என்று பொருள்.
‘உலக மக்களனைவரும் க்ஷமமாக இருக்கட்டும்’ (சர்வே ஜன: சுகினோ பவந்து:) என்று கூறுகிறது வேதம். இந்த அடிப்படையில்தான் நம்மிடம் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், நம்மீது கருணைகாட்டி, நமக்கு உதவி செய்தவர்கள் _ அவர்கள் யாராக இருந்தாலும் _ அவர்களுக்கும் இந்த மஹாளயபக்ஷம்காலத்தில் பூஜை செய்கிறோம்.

பித்ருக்களை வழியனுப்பி வைத்தல்!

இவ்விதம் மஹாளயபக்ஷம் பதினைந்து நாட்களும் பூஜித்த பிறகு, மஹாளய அமாவாசை அன்று விசேஷ பூஜை செய்து நம்மை ஒரு பொருட்டாகக் கருதி இப்பூவுலகிற்கு எழுந்தருளி நம்முடன் இந்தப் பதினைந்து நாட்களும் தங்கி, நமக்கு அருள்புரிந்ததற்காக அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களுக்குப் பாதபூஜை செய்து (பெரியவர் ஒருவர் மூலம்), நன்றி கூறி அம்மகாபுருஷர்களையும், அவர்களது தேவியரையும் (மனைவி) வழியனுப்பி வைக்கிறோம். அவர்களும் தாங்கள் வந்த தங்கமயமான விமானத்திலேயே சூரியனின் கிரணங்கள் வழியாக தங்களது நல்லுலகிற்குச் செல்கிறார்கள். ஆதலால், மஹாளயபக்ஷம்என்ற மகத்தான புண்ணிய காலம் நமக்கு அளவற்ற நற்பலன்களைத் தேடித் தருகிறது.
மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன

சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.

பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது. ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.

சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது. தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது. மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன.

பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல்…. போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள்.

இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.

இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.

அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.

நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு_இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.
நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர்.

நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது.

ஆதலால்தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.

ஆகவே மறைந்த நம் முன்னோர்கள் மூலம் நமக்குத் தேவையான மன நிம்மதி, குழந்தைச்செல்வம், கடனின்மை மற்றும் வியாதியின்மை, ஆயுர், ஆரோக்யம் போன்ற பற்பல ஸுகங்களை ஸுலபமாகப் பெறக்கூடிய மஹாளயபக்ஷம் 16 நாட்களிலும் முன் கூறப்பட்ட சில அதம பஷ ஆகார ஆசார நியமங்களை அனுஷ்டித்து பித்ருக்களுக்கு பார்வண / ஹிரண்ய சிராத்தம் / பித்ருதர்ப்பண கர்மாக்கள் செய்து போஜன தாம்பூலம் அளித்து பித்ருக்களை ஸந்தோஷிக்கச் செய்து மன நிம்மதியுடனும் ஆரோக்யத்துடனும் நலமாக வாழ, பித்ருக்கள் ஆசீர்வாதம் பெற அனைவரும் மஹாளய பக்ஷம் அனுஷ்டிக்க வேண்டும்.
இல்லத்தில் உள்ள பெரியோர்களின் ஆசி என்பது மிக உயரிய சொத்து. இது பல தலைமுறைகளைக் காக்கும் என்பதால் ராமர், கிருஷ்ணர் ஆகிய விஷ்ணு அவதாரங்கள்கூட இந்த நாளில் தர்ப்பணம் செய்தார்களாம். அவர்களோ ஆதிமுதலான தெய்வங்கள் அவர்களுக்கு எங்கே முன்னோர்கள் என்று தோன்றலாம்.

அவர்கள் விஷ்ணுவாக இருக்கும்போது, தர்ப்பணம் செய்ய வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் மனித உருவெடுத்துப் பிறந்த இல்லங்களில் முன்னோர்கள் உண்டல்லவா? அம்முன்னோர்களைத் திருப்திபடுத்தவே, ஆராதிக்கவே ராமரும், கிருஷ்ணரும் தர்ப்பணம் செய்தார்கள் என்பது குறிப்பிட்டு நோக்கத்தக்கது.

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வல்லமை கொண்ட அவதாரங்களே தர்ப்பணம் பண்ண வேண்டுமென்றால், மனிதர்கள் எம்மாத்திரம்? பித்ருக்களின் ஆசீர்வாதம் குலத்தைக் காக்கும் என்பார்கள். மனித குலத்தைக் காக்கவே அவர்களும் தர்ப்பணம் செய்தார்கள் போலும்.

தர்ப்பணம்

உடல் நிலை சரியில்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்திலும் அளிக்கலாம். ஆனால் தீர்த்தத் தலங்களுக்கு சென்று தர்ப்பணத்தை எள், நீர் தெளித்துச் செய்தால் பலன் பல மடங்கு கூடும் என்பது ஐதீகம்.

தர்ப்பணங்களில் எள் பித்ருக்களுக்கு உரித்தானதாக இருக்கிறது. இந்தத் தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும் என்பது சாஸ்திரம். இதனால் வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பது ஐதீகம்.

மஹாளயபக்ஷம் புண்ணிய காலம்

தம் குலக் கொழுந்துகள் நன்றாக இருக்கின்றனரா என்று காண வரும் முன்னோர்கள் மனம் மகிழும்படி இக்காலகட்டத்தில் இல்லத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். சண்டை சச்சரவுகள் இன்றி, இல்லம் அமைதியாக இருப்பது அவர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்குமாம்.

இந்த மஹாளயபக்ஷம் நாட்களைக் குறித்து கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் ஆகியவற்றில் சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்களில் காகத்துக்கு அன்னமிடுதலும், பசுவுக்கு அகத்திக் கீரை அளித்தலும் பல நற்பலன்களை அளிக்கும்.

பலன்

பித்ருக்கள் ஒருபோதும் தன் குலத்தைச் சபிக்கப்போவது இல்லைதான். ஆனால் அவர்கள் மனம் மகிழ்வடையும்பொழுது, வழங்கும் ஆசிகள் இல்லத்தில் கவலை அளிக்கக்கூடிய, திருமணத் தடை, புத்திரப் பேறின்மை, கடன் தொல்லை, மனக் கவலை, நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி மன அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும் என்பது நம்பிக்கை.இந்த நன்னாட்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை எனச் சில விஷயங்கள் உண்டு.

செய்ய வேண்டியவை

இல்லத்தில் உள்ள பெரியவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பசியால் வாடிவிடாமல் காக்க வேண்டும். இருக்கும்போதும், இறந்த பின்னும் முன்னோரைக் காப்போம், வழிபடுவோம்.

தர்ப்பணத்திற்குப் பின்னரே இல்லத்துப் பூஜைகள் செய்ய வேண்டும்.தர்ப்பணம் செய்ய வேண்டிய இம்மாதத்தில் திவச நாள் முடிந்த பின்னரே இல்லத்து மங்கள நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும்.ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் பித்ருக்களை வணங்கிச் சூரியனை வழிபடலாம்.ஆண்டொன்றுக்குத் தொண்ணூற்றாறு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்ற கணக்கொன்று உண்டு.மகா புண்ணியத்தை அளிக்கக்கூடியது தாய், தந்தையருக்கு இடைவிடாமல் செய்யும் திவசமே.

தவிர்க்க வேண்டியவை

கர்த்தா என்ற தர்ப்பணம் செய்பவர் தனது பெயரை இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு எந்தப் பூஜையிலும் சங்கல்பம் செய்துகொள்ளக் கூடாது.

ஆக, அதியற்புதமான- தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து, பல்லாயிரக்கணக்கான கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மஹாளய பட்ச தர்ப்பண தான- தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காணலாம்..!

வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.

மஹா-கல்யாணம், ஆலயம் -இருப்பிடம் என்ற பொருளில் கல்யாணத்திற்கு இருப்பிடமாயிருப்பதால் மஹாளயம் என்று பெயர் வந்ததாகவும் கருதலாம்.
திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். “”மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது” என்பது பழமொழி.

இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் – குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான்.

1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளயபக்ஷம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

9. மஹாளயபக்ஷம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.

13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

17. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. மஹாளயபக்ஷ அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.

21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள்
அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

22. மஹாளயபக்ஷ அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.

23. மஹாளயபக்ஷ அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.

24. மஹாளயபக்ஷ அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

25. மஹாளயபக்ஷ அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

27. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

28.மஹாளயபக்ஷத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.

29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

33. மஹாளயபக்ஷ அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்.
இந்துக்களுக்கு தமது முன்னோரது ஆசி பெற அமாவாசைகள் அதிலும் குறிப்பிட்ட சில அமாவாசைகள், வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் மிகவும் உகந்தவை.

பிதுர்தர்ப்பணத்தை பிள்ளைகள் அவசியம் பெற்றோருக்காகச் செய்யவேண்டும். தர்ப்பணம் என்றால் திருப்தியுடன் செய்வது என்றும், சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் செய்வது என்று அர்த்தம்.
மஹாளயபக்ஷ அமாவாசையில், சீக்கிரம் எழுந்து புனித நதிகளில், கடலில் அல்லது அருகிலுள்ள ஏரி குளம் இவற்றில் நீராடுவார்கள். இந்த நாளில் உண்ணாவிரதம் இருந்து அமாவாசை நோன்பையும்
கடைப்பிடிக்கின்றனர். ஸ்ரார்த சடங்குகளை செய்வது, எள் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புனிதமான செயல் என்று நம்பப்படுகிறது.

பிந்திய மாத காலத்தில் தங்கள் முன்னோர்களை வணங்க முடியாதவர்கள் இந்த நாளில் இருந்தாவது, இவற்றினை செய்தால் நலம் ஆகும். அன்று அந்தணர்கள், முதியவர்கள், ஏழைகள் என்பவருக்கு தானம் தர்மம் செய்வது பல தலைமுறைக்கும் பயன் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
தடைபட்ட திருமணம், வேலையின்மை, நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் நம் வாழ்வில் கிடைக்கப்பெறும்.

இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன.

எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம், ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது. மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால அமாவாசை உகந்த நாளாகக் கருதப் படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூயைறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர் களும் சௌபாக்கியங்களுடன் வாழ்வர்.

ஆகவே, அவர்களுக்குரிய திதி, தர்ப்பணம், திவசம் ஆகியவற்றை முறையாக செய்வது ஒன்றே அவர்களுக்கு நிச்சயமாக விடுதலை அளிக்கும். அதனால் இந்த அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து, திதி,திவசம் செய்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று இன்பமாக வாழவேண்டும்.

1. பித்ரு தோஷம் என்றால் என்ன?
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

2. அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

3. அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

4. அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

5. எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

6. ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இது வருவது ஏன்?
ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும். இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம். தெய்வத்தை வணங்காவிட்டால், சாமி கோபித்துக்கொள்ள மாட்டார். ஆனால், தென்புலத்தாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை தவறாமல் செய்யவேண்டும். அவற்றைச் செய்யத் தவறினால் வருவதுதான் பித்ரு தோஷம்.

பிதுர் தோஷம் நீக்கும் மஹாளயபக்ஷ அமாவாசை பிதுர்களாகிய மறைந்த நம் முன்னோர்கள் பூஜைக்கு ஏற்றதாக போற்றப்படுகின்றது. அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும். இடையூறு இல்லாமல் சுகமாக வாழலாம் என்பது நம்பிக்கை.

இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.

(ஆதாரம் : ஸ்ரீ பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், ஸ்ரீ கருடபுராணம், ஸ்ரீ பவிஷ்ய புராணம், ஸ்ரீ மத் மகாபாரதம், ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீ அகத்தியர் பூஜா விதானம், முதலிய நூல்கள்).

Posted in மட்றவை.

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *