வில்வத்தின் சிறப்புகள்

வில்வத்தில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். ஒரு வில்வதளம் லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமம். ஒரு வில்வதளம் சிவனுக்கு அர்ப்பித்தால் மகாபாவ்ங்கள் விலகிச் சகலக்ஷேமங்களும் உண்டாகும். மாதப்பிறப்பு, சோம்வாரம், அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, நாள்களில் வில்வம் பறிக்கக்கூடாது. இந்நாள்களில் பூஜைக்குத் தேவைப்படும் வில்வத்தை முன் நாள் மாலை வேளையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்

zzzzzzzzzzzzzzzzzzz

வருஷப் பிறப்பன்று வேப்பம்பூ பச்சடி அருந்துவதன் கருத்து யாது

வருஷத்தின் ஆரம்பநாள். ஆறு ருதுக்களும் நவக்கிரகங்களின் முறையும் மாறி, நமக்குத் தருகின்ற நன்மை தீமையாகிய பயன்களை நாம் இறைவனின் செயலாகவே எண்ணி இன்பமாக அநுபவிக்க வேண்டும். கசப்புக்கு இருப்பிடம் வேம்பு. இனிப்புக்கு இருப்பிடம் கரும்பு. வேப்பம்பூவுடன் வெல்லம் சேர்த்து பச்சடியாக்கி உலக வாழ்க்கை எனும் வேம்பை, அன்பென்னும் பாகினால் சமப்படுத்தி; நன்மை தீமை ஆகிய இரண்டையும் சமநிலையில் அநுபவிக்க வேண்டும் என்னும் உணர்வைப் பெறவே இந்நாளில் வேப்பம்பூ பச்சடி அருந்தும் வழக்கத்தை நம் முன்னோர் நமக்குத் தந்தனர்.

zzzzzzzzzzzzzzzzzzz

மொத்தம் 21 வகை பிரதோஷங்கள் உண்டு

1]தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் […]

zzzzzzzzzzzzzzzzzzz

ரத சப்தமி நாளில் எருக்க இலைகளைத் தலையில் வைத்து நீராடுவது ஏன்

தை மாதம் வளர்பிறை சப்தமி நாளில் சூரியபகவான் உண்டானார். அவர் பிறந்த திதியான ஏழு (சப்தமி) என்பதில் அவருக்குப் பிரியம் அதிகம். அவர் உடலை வடிவமாக்கிப் பிடித்த பொழுது அது சிந்தின இடத்தில் எருக்கஞ் செடி உண்டானது. எனவேதான் சூரியன் வழிபடுகினற நாளாகிய (சூரியபூஜை) ரதசப்தமி நாளில் எருக்கன் இலைகளை 7ஐ தலைமீதுவைத்து அப்பெருமானைத் துதித்து நீராடினால் ஏழு ஜன்ம பாவங்களும் அகலும் என்பது சமய மரபு-

zzzzzzzzzzzzzzzzzzz

பசுவும் புண்ணியங்களும்

* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும். * பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும். * பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர். * பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் […]

zzzzzzzzzzzzzzzzzzz

கால பைரவாஷ்டகம் (பொருள் விளக்கத்துடன்)

ஸ்ரீ சங்கராசார்யார் அருளிய கால பைரவாஷ்டகம் 1. தேவராஜ – ஸேவ்யமான – பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ர – மிந்துசேகரம் – க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த – வந்தினம் திகம்பரம் காசிகா – புராதிநாத காலபைரவம் பஜே பொருள் : இந்திரனால் சேவிக்கப் பெறுபவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும், அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை கொண்டவரும், நாரதர் முதலான யோகியர் குழாங்களால் வணங்கப் பெறுபவரும், திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் […]

zzzzzzzzzzzzzzzzzzz

தர்ப்பணம் ஸ்ராத்தம் (திதி.திவஸம்)தகவல்கள்

1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும். 2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில்தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது. 3. […]

zzzzzzzzzzzzzzzzzzz

தோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன?

தெரிந்து கொள்ள வேண்டி விஷயம் தோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன? பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். அது எப்படி சாத்தியம்? ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும்? நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான் .தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம்.இது மகிழ்ச்சிகரமான உண்மை. தோப்புக்கரணம் என்பது […]

zzzzzzzzzzzzzzzzzzz

பாவங்களின் 42 வகை. வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்.அவை:

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது. 2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது. 3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது. 4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது. 5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது. 6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது. 7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது. 8. தருமம் பாராது தண்டிப்பது. 9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது. 10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது. 11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது. 12. […]

zzzzzzzzzzzzzzzzzzz

”நமது இறந்த உடலுக்கு ஏன் காரியம்?

உடம்பை விட்டு விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம், திதி, படையல் இதெல்லாம் ஏதோ பரோபகாரம் என்றால் ஸரி தான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் கட்டைக்கு எதற்கு ஸம்ஸ்காரம்? மஹா பெரியவா இதை அழகாக விளக்கி இருக்கிறார். படியுங்கள்: ”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்து வி ட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருக்கிறது. அவரவர் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேதஸம்ஸ்காரம் […]

zzzzzzzzzzzzzzzzzzz