துளசி பூஜை செய்யும் முறை

முறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பவுர்ணமி அன்றும் இதைச் செய்யலாம். துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்க வேண்டும். தொடர்ந்து […]

zzzzzzzzzzzzzzzzzzz

நன்மை அருளும் ராகுகால பூஜை

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலேயே, ராகுகாலத்தில் சுப காரியங்களை செய்வது […]

zzzzzzzzzzzzzzzzzzz

துர்க்கை_அம்மன்_20_வழிபாட்டு_குறிப்புகள்

1. அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம். 2. துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இவை சக்தி வாய்ந்தவை. 3. துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும். 4. பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். துக்கங்கள் […]

zzzzzzzzzzzzzzzzzzz

துளசி ஸ்துதி

“துளசி மாடத்தை மூன்று முறை வலம் வரும் போது இந்த ஸ்லோகத்தை கூறினால் ஸ்ரீமஹாலட்சுமி கடாக்ஷம் உண்டாகும்* நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே நமோ மோக்ஷப்ரதே தேவி நமஸ் ஸம்பத் ப்ரதாயினே துளசி சு-சகி-சுபே பாப ஹாரிணி புண்யதே நமஸ்தே நாதனுதே நாராயண நமப்ரியே!

zzzzzzzzzzzzzzzzzzz

ஆடி,தை மாத்த்திய வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு விசேஷாமாகச் சொல்லப்படுவதற்கு உரிய காரணம் யாது

தக்ஷிணாயனம், உத்தராயணம் என்னும் இவ்விரு அயனங்களுமே புண்ணியகாலங்கள் எனக் கொள்ளப்படுகின்றன. அயன ஆரம்ப காலமாகவுள்ள இவ்விரு மாதங்களும் சிறப்புடையவை பொதுவாக வெள்ளிக்கிழமை அம்பாளுக்குரிய சிறந்த நாள். இதனோடு அயனத்தின் ஆரம்பம் என்னும் சிறப்பும் சேருகின்றதால் இவ்விரு மாதங்களிலும் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்கு மிகவும் விசேஷமுடையனவாகக் கருதப்படுகின்றன. இம்முறை பற்றியே இவ்விரு மாதங்களிலும் வரும். அமாவாசை, கிருத்திகை நாள்களும் மிகவும் விசேஷமுடையனவாக்க் கொள்ளப்படுகின்றன. (தை, அமாவாசை, தைக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை)

zzzzzzzzzzzzzzzzzzz

அறுபத்துநான்கு கலைகள் எனப்படுபவை எவை

1 அக்ஷரவிலக்கணம் (எழுத்தியல்பு) 2 லிகிதம் (எழுதும் ஞானம்) 3 கணிதம் (எண்நூல்) 4 வேதம் (முதல் நூல்) 5 இதிகாசம், புராணம் (பூர்வ கதை) 6 வியாகரணம் (இலக்கணம்) 7 சோதிட சாஸ்திரம் (வான நூல்) 8 தரும சாஸ்திரம் (அற நூல் ) 9 நீதி சாஸ்திரம் (நீதி நூல்) 10 யோக சாஸ்திரம் (யோக நூல்) 11 மந்திர சாஸ்திரம் (மந்திர நூல்) 12 சகுன சாஸ்திரம் (நிமித்த நூல்) 13 சிற்ப […]

zzzzzzzzzzzzzzzzzzz

அரசமரமும் வேம்பும் உள்ளா இட்த்தில் விநாயகர் ஆலய முள்ளது. அதை பிரதக்ஷிணம் செய்வதற்கு விதிமுறைகள் உள்ளதா யார் செய்வது

இந்துக்கள் யார் வேண்டுமானாலும் பிரதக்ஷிணம் செய்யலாம். ஸ்நானம் செய்து மடியாக, ஆண்கள் விபூதியிட்டு, பெண்கள் குங்கும்மிட்டு காலை எட்டு மணிக்குள் ஏழு பிரதக்ஷிணமாவது செய்ய வேண்டும். எள், வெல்லம் நிவேதனம் செய்யலாம். சனிக்கிழமைகளில் மட்டும் அவசியம் பிரதக்ஷிணம்  செய்வது நல்லது. காலை எட்டு மணிக்குப்பிறகு அரசமரத் தடிக்குப் போக்க்கூடாது.

zzzzzzzzzzzzzzzzzzz

அபிஷேகம் ஏன் செய்யப்படுகின்றது

நாம் உயிர் வாழக்கூடிய ஆத்மாக்கள் வாழ்வில் சுகமாக வாழ்வதற்கு பரமாத்மாவை வேண்டி கிரிகைகளால் வழிபாடு செய்கிறோம். கோயிலில் உள்ள இறைவனுக்கு அபிஷேகம். நிவேதனம், பூசை, விழா முதலியவை நடைபெற வேண்டும். சிவனுக்கு அபிஷேகத்தில் அதிக விருப்பம். மகாவிஷ்ணுக்கு அலங்காரத்தில் அதிக விருப்பம் அபிஷேகப் பொருள்களால் பரமனைக் குளிரச் செய்தால் நமது துயரமெல்லாம் நீங்கும்.

zzzzzzzzzzzzzzzzzzz

அபிஷேகக் காலத்தில் வலம் வந்து வணங்கலாமா

அபிஷேகக் காலத்தில் உட்பிராகாரத்தில் வலம் வந்து வணங்கலாகாது. அபிஷேகம், நிவேதனம் முதலியவை  நடைபெறும்போதும், திரை போட்டிருக்கும்போதும், சுவாமியைத் தரிசன்ம் செய்யலாகாது.

zzzzzzzzzzzzzzzzzzz

அபிஷேக தீர்த்தம் பெற்று உட்கொண்ட பின்பு சிலர் கைகளைத் தலையில் தடவிக் கொள்வது ஏன்

அபிஷேக தீர்த்தம் மிகவும் உயர்ந்த்தும் புனிதமானதும் ஆகும். இதை இருகைகளாலும் பெற்று அப்படியே உட்கொள்ள வேண்டும் அவ்வாறு பெரும் போது விரல்லள் இடுக்கில் கீழே சிந்தாம்லிருக்க வேண்டும் என்பதற்காக,கைகளின் அடியில் துணியை வைத்துப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. உட்கொண்ட பின்பு கைகளில் ஒட்டி இருக்கும் நீரும் கீழே சிந்தாதிருக்க வேண்டும் என்பதால் கைகளையே ஒன்றின் மீது ஒன்றாகத் தேய்த்துக் கொள்வதும், கைகளைத் தலையில் தடவிக்கொள்வதும் ஆகிய பழக்கங்கள் ஏற்படலாயின அபிஷேகத்தீர்த்தம் சிறிதும் கீழே சிந்தலாகாது என்பதே இவற்றின் அடிப்படை.

zzzzzzzzzzzzzzzzzzz