கோயில்ன் ராஜகோபுரத்தில் பல்வகை உருவச் சிற்பங்களும் அமைவது ஏன்

கோயிலில் உள்ள கோபுரங்களைவிட இது உயர்ந்ததாக இருக்கும். ஆலயத்தின் முகப்பில் உள்ள இக்கோபுரம் “ஸ்தூல லிங்கம்” எனப்படும். தொலைவில் உள்ளோரும் கண்டு கைகூப்பித் தொழத்தக்கதாக அமைந்துள்ள இக்கோபுரத்தின் அமைப்பு 3,5,7,9,11, எண்ணும் எண்ணிக்கையில் அமைந்த நிலைகளைக் கொண்டதாக இருக்கும். இக்கோபுரத்தில் பல்வகை வடிவங்களும் சிற்பங்களாக  இடம் பெறும். பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பாக இக்கோபுரம் திகழ்வதால். ஆகம அடிப்படையில் அமைவதால். எல்லாவகையான நிலையுடைய சிற்பங்களும் இக்கோபுரத்தில் இடம் பெறுகின்றன. இக்கோபுரத்தைத் தொலைவில் காணும் போதே கைகூப்பித் தொழுதல் வேண்டும்

zzzzzzzzzzzzzzzzzzz

கேதார கெளரி விரத நோன்பின்போது 21 என்ற எண்ணிக்கையில் அதிரசங்களையும் மற்றப் பொருள்களை வெற்றிலை பாக்கு மஞ்சள் பூ யும் வைத்துப் படைப்பதன் நோக்கம் யாது

பிருங்கி என்னும் மகரிஷி பெருமானை வணங்க வந்த போது அவர் அம்மையபராக இருந்த கோலங்கண்டு வண்டு உருவங்கொண்டு அவர்களுக்கு இடையிற் புகுந்து இறைவனை மட்டும் வலம் வந்தார். இதைக்கண்ட உமாதேவி இறைவனை விரதமிருந்து நோற்று அவருடம்பிலிருந்து பிரிக்கமுடியாதவாறு இடப்பாகத்தில் ஒன்றியிருக்கும் பேற்றினைப் பெற்றார். இவ்வடிவமே அர்த்த நாரீசுவரராகும். இந்த நோன்பு விதமே கேதார கெளரி விரதம் எனப்படும். புரட்டாசி மாதம் வளர்பிறைல் தசமி திதி நாள் தொடங்கி, ஐப்பசிமாதம் தேய்பிறை அமாவாசை- தீபவளி வரை 21 நாள்கள் […]

zzzzzzzzzzzzzzzzzzz

காசி,கயையாத்திரை சென்று வந்தவர்கள் ஏதேனும் ஒரு காய். கனியை உண்ணாமல் விட்டுவிடுவதன் கருத்து யாது

காசியைப் போல் கயாவும் முக்கியத் தலமாகும், யாத்திரை புரிவோர் எல்லாத் தலங்களுக்கும் போக இயலாதவர்கள் பிரயாகை, காசி, கயை என்ற இந்த மூன்றையும் தவறாமல் சேவிக்க. அதாவது பிரயாகையில் சவுளஞ் செய்து கொள்ள (முடி வாங்கிக் கொள்ள) வேண்டும்; காசியில் விசுவநாதரை நன்கு வணங்க வேண்டும்; கயையில் பிதிர்களுக்குப் பிண்டம் போட வேண்டும். கயையில் பிண்டந்தான் பிரதானம். கயாசுரன் என்பவன் சிறந்த நாராயண பக்தன். அவன் இருந்து தவஞ்செய்து நற்கதி பெற்றதனால் இத்தலம் தூய்மை பெற்றது. அதனால் […]

zzzzzzzzzzzzzzzzzzz

கர்ப்பக்கிருகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் அவருக்கு எதிரில் உள்ளே இருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வணங்கலாமாகூடாதாஏன்

ஆலய ஆகமவிதிப்படி கர்ப்பக்கிருகத்தினுள் இருக்கும் மூலவருக்கும், எதிரில் நந்தி இருக்கும் இட்த்திற்கும் இடையில் நின்று வணங்குதல் கூடாது. காரணம், ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னல் உள்ள நந்தி, மூக்கிலிருந்து விட்ம் மூச்சுக் காற்றினால் தான் கர்ப்பக்கிரகத்திலுள்ள மூலவருக்கு உயிர்நிலை தருவதாக்க் கருத்து, இதனால்தான் மூலவரின் வயிற்றுப் பகுதி-கொப்பூழ் (தொப்புள்) பாகத்தை உயிர்நிலையாகக் கொண்டு அந்த இட மட்ட்த்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு ஆலயங்களில் நந்தி அமைக்கப் படுகிறது. இம்மூச்சுக் காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவதும், […]

zzzzzzzzzzzzzzzzzzz

எவ்வெக் காலங்களில் தரிசிப்பது கூடாது

காலையில் கோயிலைத் திறந்தவுடன் உடனே சென்று தரிசிக்க்கூடாது. சிவாசாரியார் முதலில் சென்று தீபமிட்டு, தீபாராதனை செய்த பிறகே நாம் சென்று தரிசிக்க வெண்டும். அவ்வாறே திரை போட்டிருக்கும் காலங்களிலும், ஆடையின்றி அபிஷேகம் செய்யும் போதும், சந்நிதியில் தீபம் இல்லாதபோதும் தரிசிக்க்க்கூடாது. பரிசுத்த்மான இடமான் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பி வந்த்தும் உடனே கால்களைக் கழுவக்கூடாது. சிறிது நேரம் உட்கார்ந்த பின்பு கால்களை கழுவிக் கொள்ளலாம்.

zzzzzzzzzzzzzzzzzzz

இறைவனை வழிபடும் முறைகள்

இறைவனை வழிபட நம் முன்னோர்கள் ஒன்பது வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறார்கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து வழிபடலாம். இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் – ”ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத ஸேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம்” ச்ரவணம் – கேட்டல்: இறைவனுடைய புகழைக் கேட்டு பின் அவன் வசமாதலை முதலில் சொல்கிறார்கள். இதற்கு சொந்தமாகத் தெரிந்து வைத்திருக்க அவசியம் இல்லை. கற்றிலன் ஆயினும் கேட்க […]

zzzzzzzzzzzzzzzzzzz

உருத்திராச்சம் அணிவதால் உண்டாகும் மருத்துவப் பயன் யாது

உருத்திராச்சம் அணிவதால் இரத்த அழுத்தம் சமநிலை பெறும். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருத்திராச்சமாலையைத் தலைமேல் வைத்துக் கொண்டு குளிர்ந்த நீரைக்கொட்டி;நீராடிவந்தால் சமநிலையடையும். இதயவலி உண்டாயின் முதிர்ந்த பெரிய ருத்ராக்ஷ்த்தை சந்தனம் போல் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து உள்ளுக்கும் கொடுத்தும் மேலேயும் பூசிவந்தால் குணம் அடையும். அன்றாடம் நீரில் ருத்ராச்சத்தை ஊறவைத்து அந்நீரைப் பருகிவந்தால் உடற் சூடு தணியும்; சளித்தொல்லைகள் நீங்கும்

zzzzzzzzzzzzzzzzzzz

ஆலயத்தில் எந்தத் திசையிலிருந்து வீழ்ந்து வணங்க வேண்டும்

கிழக்கு,மேற்கு நோக்கிய சந்நிதிகளில் வடக்கே தலை வைத்தும்: தெற்கு, வடக்கு நோக்கிய சந்நிதிகளில் கிழக்கே தலை வைத்தும் வீழ்ந்து வணங்குதல் வேண்டும். (தன் கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வச் சந்நிதியும் இருத்தல் கூடாது. கொடிமரத்தின் முன்னால் வீழ்ந்து வணங்கினால் அங்கு எத்தெய்வச் சந்நிதியும் இருக்காது. எனவேதான் இங்குமட்டுமே வீழ்ந்து வணங்க வேண்டும் என்று நம் முன்னோர் விதித்துள்ளனர்) ஆண்கல் பஞ்சாங்க நமஸ்காரம் பெண்கல் மண்டி இட்டு நமஸ்கரிக்க வேண்டும் சுபம் சுபம் சுபம்

zzzzzzzzzzzzzzzzzzz