குழந்தை வரம்… வேலைவாய்ப்பு… குறைகள் தீர்க்கும் சனிப் பிரதோஷ அபிஷேகங்கள்!

பிரதோஷம் என்பதற்கு “பாவங்களை போக்கக்கூடிய வேளை” என்று பொருள். அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் ஆலகால விஷம் தோன்றியது. தேவர்கள் உட்பட அகிலம் முழுவதும் ஆலகாலத்தின் வெம்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தனர். அவர்களிடம் கருணை கொண்ட சிவபெருமான், ஆலகால விஷத்தைத் தாம் ஏற்றுக்கொண்டார். சிவபெருமானின் கருணைக்கு நன்றி செலுத்த தேவர்கள் சென்றபோது, நஞ்சுண்ட பரமனின் மூச்சுக் காற்று பட்டு தேவர்கள் அனைவரும் மயங்கினர். தேவர்களைக் காப்பாற்றுவதற்காக, நந்திதேவர் அந்த நச்சுக் காற்றை […]

zzzzzzzzzzzzzzzzzzz

எப்படி சனிபகவான்,சனீஸ்வரர்_ஆனார்? சனி பகவானுக்குனு தனி கோவில் எங்கே உல்லது!!!!!!!

நவக்கிரங்களில் ஒன்றான சனி பகவானை சனீஸ்வரன் என்று சிவனின் நாமத்தையும் சேர்த்து வழிபடுகிறோம். ஏன் அப்படி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது? எப்படி சனி , சனீஸ்வரன் ஆனார்? சூரியனுக்கு உஷாதேவி(சுவர்க்கலாதேவி) சாயாதேவி என்று இரண்டு மனைவிகள். சாயாதேவிக்கு பிறந்த கிருதவர்மா என்ற மகன்தான் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். கருமை நிறம் கொண்ட சனீஸ்வரனுக்கும் ஒளியாக மின்னும் சூரியனுக்கும் பகை உணர்வு ஏற்பட்டது. சனி பகவானுக்கு சிவன் மீதுதான் பக்தி அதிகமாக இருந்தது. சிவனுக்கு நிகரான நிலையை அடைய […]

zzzzzzzzzzzzzzzzzzz

தேய்பிறை அஷ்டமி ✬ அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அதன் காரனம்

தேய்பிறை அஷ்டமி ✬ அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது, தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர். ✬ அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை. ✬ […]

zzzzzzzzzzzzzzzzzzz

துளசி பூஜை செய்யும் முறை

முறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பவுர்ணமி அன்றும் இதைச் செய்யலாம். துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்க வேண்டும். தொடர்ந்து […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஹனுமான் சாலீஸா

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார் எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன். நான்கு கனிகள்: 1. அறம்-நல்வழி 2.பொருள்-நல்வழியில் ஈட்டிய செல்வம் 3. இன்பம்-நல்வழியில் நிறைவேற்றப் பெறும் ஆசைகள் 4. வீடு-சம்சார வாழ்விலிருந்து விடுதலை. புத்தி ஹீன தனு ஜானி […]

zzzzzzzzzzzzzzzzzzz

நமச்சிவாய புஜங்கம்

நமச்சப்தமாத்ரே ஸதாதுஷ்டதேவம் நதாநாம்முனீனாம் ஹ்ருதிஸ்தம்கிரீசம், நரேந்த்ராதிபத்யம் ததந்தமவஹந்தம் நமச்சிவாயேதி பதாபிதம்ஸ்துவே. ‘நம’ என்றதும் ஸந்தோஷமடையும் தெய்வம், வணங்குமின்றமுனிவர்களின் உள்ளத்தில் இருந்து, ராஜ்யத்தைக் கொடுத்தும் வஹித்தும்வரும் கிரீசனான சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்ற பதத்தினால் அழைத்துஸ்துதி செய்கின்றேன். மஹாதேவமீசம் மஹாவாக்ய்கேஹம் மஹாத்மானமேகம் மஹத்தத்வமூர்த்திம் மஹாருத்ரயஜ்ஞை: ஸதாஸ்தூயமானம் நமச்சிவாயேதி பதாபிதம்ஹுவே. மஹாதேவன், ஈசன் மஹாவாக்யத்தையே உறைவிடமாகக் கொண்ட மஹாத்மா, ஒரே கடவுள், மஹத் தத்வமுடைய மூர்த்தி,மஹாருத்திரங்களினால் எப்பொழுதும் துதிக்கப்படுகிறவர் ஆகிய சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்ற பதத்தினால் அன்போடு அழைக்கின்றேன் . சிவம்சாந்தமூர்த்திம் […]

zzzzzzzzzzzzzzzzzzz