பெண்கள் செய்யத்தகாத செயல்கள் எவை

பெண்கள் பூசணிக்கய் திருஷ்டி சுற்றி உடைக்கக் கூடாது. கர்ப்பமுள்ள பெண்கள் தேங்காயையும் (சிதறு காயாக) உடைக்கக் கூடாது. கணவனுக்குத் தெரியாமல் தர்மம் செய்யலாகாது (பெண்கள் கண்ணீர் விட்டால் வீட்டில் செல்வம் ஒருநாளும் தங்காது) தலையை விரித்துப் போட்டுக்கொண்டிருப்பதும், அவ்வாறே உட்கார்ந்திருப்பதும் இரு கைகளாலும் தலையைச் சொரிவதும் கூடாது. இரவில் வீட்டைப் பெருக்க்க் கூடாது. பகலில் குப்பையைச் சேர்த்து வைக்காமல் பெருக்கியவுடன் கொண்டு போய்க் கொட்டிவிட வேண்டும். திருமணமான பெண்கள் காலில் மெட்டி இல்லாமல் இருக்கக் கூடாது.

zzzzzzzzzzzzzzzzzzz

விநாயகருக்கு அறுகம்புல் அருச்சனை மிகவும் உகந்த தாகச் சொல்லப்படுவதற்குரிய வரலாரு என்ன

ஒரு நாள் கைலாய மலையில் பார்வதி பரமசிவனுடன் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது நந்தியம் பெருமான் திடீரென்று உள்ளே வந்து, “பிரபொ, தேவேந்திரனும், பிரம்மனும், முப்பத்துமுக்கோடி தேவர் களையம் அழைத்துக்கொண்டு தங்களை அவசரமாய்ப் பார்க்க வந்திருக்கிறர்கள்” என்றார் .பிள்ளையார் அனைவரையும் உள்ளே வரச்சொன்னார். அனைவரம் அமர்ந்த்தும். “என்ன சமாசாரம்” என்று பிரமனைக் கேட்டார்` பிரம்மா சொன்னார். “யானைமுகப் பெருமானே, அனலாசுரன் என்ற அசுரன் எல்லோரையும் துன்புறுத்துகிறான். அவன் கிட்டேயே போக முடியவில்லை. யார் போனாலும் நெருப்பாகத் தகித்து […]

zzzzzzzzzzzzzzzzzzz